Author Topic: பெண்களைக் குதறும் மிருகங்கள்  (Read 969 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பெண்களைக் குதறும் மிருகங்கள்


தப்பித் தவறிக் கூட நடிக்க ஆசை மனசுல ஏற்படவே கூடாது, அப்பப்பா அது ரொம்ப மோசமான ஏரியா, அந்த ஏரியாவுக்குள்ள போய் ஒழுங்கா வேலை பார்த்துட்டு உத்தமமா திரும்பி வர நெனைக்கிறவன் பைத்தியக்காரன். வெளியில, சினிமாவ பார்க்கும்போது ஏற்படற பளபளப்பு அழகு கவர்ச்சி எல்லாமே உள்ளே போனா பார்க்கமுடியாது, எங்கு பார்த்தாலும் பொய், வேஷம், பொறாமை. இதையெல்லாம் ஏற்கனவே தன் வாழ்க்கையில ரத்தமும் சதையுமா வச்சிருக்கவங்களுக்கு பெரிசா ஒண்ணும் வித்தியாசம் தெரியறது கிடையாது. ஒழுக்கம், உண்மை, நாணயம், நேர்மை, கற்ப்பு இத பத்தியெல்லாம் அரிச்சுவடிக்கூட அறியாதவங்களுக்கு மிகவும் சுலபமாக ஒத்து போகக் கூடிய இடம்.

நடிக்கனம்ன்னு ஆசை ஏற்பட்டு மிகவும் தெரிஞ்ச குடும்ப (சிநேகிதர) இயக்குனரை பார்க்கப் போனா, அங்க இருக்கிற ஆளுங்க நம்மள ஒரு சைகோவாவே மாத்திவிட முயற்சி பண்ணறாங்க, ஒண்ணு நாம சைக்கோவா மாறிடுவோம் இல்லைன்னா வேஷம் போடாத முழுநேர வேசியா மாத்திடுவாங்க. நிச்சயம் நடிகையா ஆகவே முடியாது, ஏன்னா ஏற்கனவே நாம எல்லாத்துக்கும் ஒத்து போகிற' பேர்வழியா இருந்தாத்தான் நடிகையா ஆகமுடியும்ன்னு சொல்றாங்க. துண்டக் காணோம் துணியக் காணோம்ன்னு திரும்பிப் பார்க்காம ஓடிவரவேண்டிய நிலைமைதான்.

சில வருடங்களுக்கு முன் பத்திரிகையில் படித்த செய்தி ஒன்று நினைவிற்க்கு வருகிறது, எந்த நாடு என்பது சரியாக நினைவில் இல்லை ஆனால் ஐரோப்பியநாடுகளில் உள்ள சிறிய ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் உலக அழகி போட்டியில் கலந்துகொள்வதற்காக தனது கிராமத்திலிருந்து கிளம்புவதற்கு விமான சீட்டு பதிவு செய்திருந்தார், அவர் உலக அழகி போட்டிக்கு செல்பவர் என்பதை அறிந்த அந்த ட்ரவல்ஸ் உரிமையாளர் அந்தப் பெண்ணை குறிப்பிட்ட தேதியில் வந்து சீட்டுப் பெற்றுக்கொண்டு செல்லும்படி கூறியிருந்தார், சீட்டைப்பெற்றுக் கொண்டு விமான பயணத்திற்குச் செல்லவிருந்தப் பெண்ணை கற்பழித்து பின்னர் அவர் கையில் விமான பயணச் சீட்டை கொடுத்தார், அந்தப் பெண்ணிற்கு பெருத்த ஏமாற்றம், போட்டியில் கலந்து கொள்ள போதிய மனத்தெளிவை இழந்த நிலையில் போட்டியை எதிர்கொள்ள இயலாத மனோ நிலையில் வேதனைக்கு தள்ளபட்டார் அந்த இளம்பெண்.

பயணச் சீட்டு வாங்குவதற்காக செவழித்தப் பணத்தை அவர் சேர்ப்பதற்கு பலகஷ்டங்கள் படவேண்டியதாக இருந்ததால் அந்த பயணத்தை ரத்து செய்யவும் இயலாமல் விமானநிலையம் செல்வதற்காக வாடகைக்கார் ஒன்றில் ஏறி பயணமானார், அந்த கார் ஒட்டுனரிடமும் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்டு பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டார், அங்கிருந்து விமான நிலையம் நோக்கி கால்நடையாக பல மையில் தூரம் நடந்து சென்று விமானம் ஏறி குறிப்பிட்ட நகரை சென்றடைந்தார், உலக அழகிப் போட்டியில் அவ்வருடத்தின் உலக அழகி பட்டமும் பணமும் எல்லா வசதிகளையும் பெற்றார், அப்போது அவர் மனம் சிறிது கூட சந்தோஷமாக இல்லை, அவரது முகத்தில் சோகம் மட்டுமே நிறைந்திருந்ததை கண்ட பத்திரிகைகளும் ஊடகங்களும் அவரிடம், உலக அழகிப் போட்டியில் வென்று இருக்கின்றீர்களே இருந்தும் நீங்கள் சந்தோஷப்படவில்லையே உங்கள் முகத்தில் வேதனைதான் தெரிகிறது அதற்க்கு என்ன காரணம் என்றனர்,

அப்போது அவர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை விவரித்துச் சொன்னார், தான் வீட்டிலிருந்து கிளம்புகின்ற போது தனக்கிருந்த மனநிலையிலேயே உலக அழகிப் போட்டியை வென்றிருந்தால் நிச்சயம் தான் எல்லையில்லா மகிழ்ச்சியை அடைந்திருக்க முடியும் ஆனால் தனக்கேற்பட்ட கேவலமான அனுபவங்களால் இந்த மகிழ்ச்சியை கொண்டாடவோ ஏற்கவோ மனதில் சந்தோசம் இல்லை, பல வருடங்களாக உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி அடைய பல முயற்ச்சிகளை மேற்கொண்ட போது இருந்த மனநிலை தற்போது இல்லாமல் போனதன் காரணம் தன்னை தாருமாறாக்கியவர்களின் துஷ்டச்செயல்கள்தான் என்று சொல்லி கண்ணீர் வடித்தாராம்.

இது போன்றதுதான் நடிக்க ஆசைப்பட்டு அங்கு சென்ற பின் கிடைக்கும் அனுபவங்களும், என்னதான் தெரிந்தவர்கள் அந்த துறையில் இருந்தாலும் சந்திக்கும் வேறு மனிதர்கள் எல்லோருமே நடிக்க வருகின்ற பெண்களிடமிருக்கும் பெண்மையை குறிவைக்கும் கோர மிருகங்களாகவே உள்ளனர், அவர்களிடம் சிக்குண்டு சின்னாபின்னமாகி வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் ஏராளம், அங்குள்ள சூழலுக்கு ஏற்றார் போல தன்னைமாற்றிக்கொண்டு பலருக்கு தன்னை இறையாகிய பின்னும் அதிலேயே வாழ்க்கையை தொடருபவர்களும் உண்டு. வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றால் அதில் மனதிற்கு திருப்தி கிடைப்பது கடினம், இப்படித்தான் வாழவேண்டும் என்று நமக்கு நாமே கட்டுபாடுகளை ஏற்படுத்திக்கொண்டு வாழமுயலும் போது வாழ்க்கையில் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருப்பதும் உண்டு. வாழ்க்கையே போராட்டம் மிக்கதுதானே. தெரிவு செய்வதில்தான் நம் வாழ்க்கையின் இன்பதுன்பம் அடங்கியிருக்கிறது.