Author Topic: பாவமில்லாமல் வாழ முடியுமா  (Read 1015 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பாவமில்லாமல் வாழ முடியுமா


பாவம் என்பது என்ன, அநீதியெல்லாம் பாவம்தான், நீதி அநீதியை நாம் எப்படி பாகுபாடுசெய்கின்றோம், நன்னூல்களை படித்து அறிந்து கொள்வதாலும், அப்படி படித்து நன்நெரியினை அறிந்தவர்களின் உபதேசங்களாலும் இவற்றை அறிந்துகொள்கிறோம். உதாரணமாக; கரடு முரடான பாதையில் பயணம் மேற்கொள்ளும்போது காலில் முள் தைத்து அதனால் வலி ஏற்ப்படுபோது, அடுத்தமுறை முள் கால்களில் தைக்காமல் நடையில் கவனம் வைக்கின்றோம், பாதங்களை காப்பதற்கு முள் கல் எதுவும் தைக்க இயலாத ஏதோ ஒரு உறை போன்ற ஒன்றை உருவாக்கி கால்களில் அணிந்துகொண்டு நடந்து பழகுகிறோம், முதலில் அந்த உறையை காலில் அணிந்துகொண்டு நடப்பதற்கு சிரமமாக தோன்றி உறை ஏற்ப்படுத்தும் காயங்களிலிருந்து சுகம் பெற ஏதேனும் வைத்தியம் செய்து மீண்டும் உரையினை பாதங்களுக்கு அணிவித்து நடந்து செல்லப் பழகுகிறோம்,

இதே போன்று பாவம் என்கின்ற முள் நம் வாழ்க்கை பாதையில் தைக்காமலிருக்க அல்லது நம்மை பாவத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு ஏற்க்கனவே முள்பாதையில் நடந்து சென்றவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து அறிந்து நாம் எவ்வாறு நடந்தால் பாவம் என்கின்ற முள் தைக்காமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று சிந்தித்து செயல்படுகிறோம். பாவம் செய்தால் என்னத் தவறு என்று நினைத்து அதிலேயே மூழ்கி குறிப்பிட்ட காலத்திற்கு முன்னே பல துன்பங்களுக்கு ஆளாகி சமூகத்தில் மரியாதை மதிப்பின்றி நோய்களின் பிடியில் சிக்கி மாண்டுவிட நேரிடுகிறது. அப்படி மாண்டுவிடுவதற்க்கு முன்பே மன அமைதி இழந்து உணவிழந்து உற்றார் உறவுகளை இழந்து தனிமையாக்கப்படும் நிலையில் மன உளைச்சல் பெருகுகிறது.

பாவம் செய்யத் தூண்டும் காரியங்களில் மிகவும் பிரதானமாக இருப்பது கண்கள், பசி, நண்பர்கள். கண்கள் பார்க்கும் ஆடம்பர வாழ்க்கை, அழகிய பெண்களின் மீதுமோகம் போன்ற பலவற்றை சொல்லலாம். கண்களினால் ஏற்ப்படும் ஆசை மனதினுள் சென்று உணர்வுகளைத் தூண்டி அதற்காக பல குற்றங்களை செய்து பொருள் பணம் வீடு நிலம் என யாவற்றையும் பெருக்கிக்கொள்ளும் ஆசைகளை மென்மேலும் அதிகப்படுத்துவது கண்களின் மூலம் ஏற்படுத்தபடுகின்ற ஆசைகள் அல்லது இச்சைகள், பாவ புண்ணியத்தை மறக்கச் செய்து மதியிழக்க வைக்கும் நிலைக்கு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். பாவத்தைப்பற்றி யாராவது சொன்னால் அவர்களை 'பிழைக்கத்தெரியாதவர்கள்' என்று நினைக்க வைக்கும். ஆசை என்பது மனதினுள் நுழைவதற்கு இடம் கொடுத்தால் நாளடைவில் அது பேராசையாக மாறி நடுத்தெருவிற்கு கொண்டுவந்து சேர்க்காமல் விடுவதில்லை. இதனால்தான் பலர் மென்மேலும் சம்பாதிக்க ஆசைப்பட்டு கடைசியில் குற்றவாளிக் கூண்டிற்கு வந்து சேருகின்றனர்.

பசி என்பதை நம்மால் கட்டுக்குள் கொண்டுவர இயலாதென்றாலும், பசிக்கு தேவையான உணவுக்காக பொருளீட்டுவதற்கு விலைமாதர்களாவது என்பது வீட்டிற்கு வெளிச்சம் தேவை என்பதற்காக இடுப்பிலிருக்கும் சேலையை பந்தம் கட்டி எரியச்செய்வது போன்றதாகும். சில பெண்கள் கூறுவது போல சம்பாதிக்கச் செல்லும் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண் கூட்டம் இருப்பது போல பெண்கள் எங்கே தனியாக வேலைக்குச் சென்றாலும் அங்கு ஒருபாலியல் பலாத்காரத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்பது நிஜம்தான். திருமணம் செய்துகொண்ட கணவனும் பொறுப்பானவராக இல்லாமல் போனால் பெண்ணின் நிலை என்பது சோகக்கதையாகி விடுவது உண்மை. பசிக்குப் போராடும் குழந்தைகளும் அல்லது குழந்தைகள் இல்லையென்றாலும் தன் பசிக்கு சம்பாதித்து தான் ஆகவேண்டும். பாவம் செய்ய இடம் கொடாமல் அதாவது பசிக்காக வேசியாக பாவத்தில் வயிற்றை நிரப்புவதை தவிர்க்க முயற்சி செய்து போராடி வாழத்தான் வேண்டும்.

பாவம் என்பதை வாழ்க்கையில் ஏற்க்கனவே செய்திருந்தாலும் இனி செய்யாமலிருக்க முயற்ச்சிகள் எடுத்தால் முடியாதது கிடையாது. முயற்ச்சிகளை எடுக்கும்போது நிச்சயம் நல்ல வழிகள் கிடைக்கும், மிகவும் கவனமாக வாழ்க்கை என்கின்ற பந்தயத்தில் ஓட வேண்டிய தூரத்தை ஓடி கடக்க வேண்டும். பாவம் செய்துதான் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கிறது அதிலிருந்து வெளியே வர இயலவில்லை என்பதால் தற்கொலை செய்து உயிரை விடுவதும் கூட பாவம் என்றுதான் நன்னெறி நூல்கள் சொல்கிறது, தன் உயிரை தானே மாய்த்துக்கொள்ளும் உரிமை யாருக்கும் கொடுக்கப்படவில்லை அதனால் தற்கொலையும் பாவம்தான். பாவமின்றி வாழ முயற்ச்சிகள் செய்வதே மனிதனின் கடமை.