Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 074  (Read 1856 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நிழல் படம் எண் : 074
இந்த களத்தின்இந்த  நிழல் படம் thamilanஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 09:37:31 PM by MysteRy »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


வியாபாரமாகிவிட்ட வாழ்வில்
உயிர்களைப் பணயமாக்கி
அண்டவெளியை
தனதாக்கி
ஈரமற்ற மனதிற்கு
தண்ணீர் தேடியலையும்
மனிதனுக்கு புரிவதில்லை
அணைக்கும் அன்பின் அதிசயத்தை.

எழுதப்படா
என் கவிதை வரிகளில்
சில கம்பீர வரிகளில்
பொருத்தியுமிருந்தேன்,

அன்பின் மறுபெயர்,
சேவையின் முதல் பெயர்.

கசங்கிய துணியொன்றை
அழுத்தித் தேய்க்கும்
சூடான கருவியொன்றின்
அற்புதம்
அந்தக் கைகளுக்கு

தேடிய கனவொன்றை
அன்பு சிலையொன்றை
செதுக்கும் ஆர்வத்தோடு
குழைத்துச் செதுக்க
தன் கனவைச் சொல்லி
தனக்கான அதிகாரத்தை
எடுத்தும் கொள்கிறது.

கூப்பிய கரங்களுக்குள்
அகப்படாத ஒரு கடவுள் நீ...

அர்ச்சனைப் பூக்களோடு
ஒரு குழந்தை நான்...


Offline thamilan

கடவுளை கண்டவர் யார்
கடவுள் எங்கிருக்கிறார்
கேள்விக்குப் பதிலாக
தரை இறங்கி வந்த
தெய்வப் பிறவி நீயலவா

தன்னலமற்றது தாய்மை
தன் குழந்தை என்று வரும் போது
தாய்மையே
சுயநலமாகும் சாத்தியங்கள் உண்டு
உலகத்தில் உள்ள ஏழை குழந்தைகளை
தன் குழந்தையாக அமுதூட்டிய நீ
தாய்மைக்கும் மேலான தெய்வப் பிறவி அல்லவா

பசித்திருப்பவர்களுக்கு அமுதூட்டி
பிணித்திருப்பவர்களுக்கு மருந்தூட்டி
ஒரு தாயாக ஒரு செவிலியாக
உன் வாழ்க்கையே அர்ப்பணித்த நீ
ஒரு தெய்வத்தாய் அல்லவா

அதனால் தானே உலகமே உன்னை
அம்மா என்று அழைத்தது
இந்த பாக்கியம் யாருக்குக் கிடைக்கும் 

ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாமாம் 
அந்த ஏழைகளை அமுதூட்டி அரவணைத்து
மனமகிழ்ந்து சிரிக்கவைப்பவர்களிடமும் 
இறைவனைக் காணலாம்
நீ இறைவனின் வாரிசல்லவா

நீ வாழ்ந்த காலத்தில்
நாங்களும் வாழ்ந்தோம்
இதுவே ஒரு பெரும் பேறு
 
ஊதுபத்தி கரைந்தாலும்
அதன் மனம் காற்றில் கலந்திருப்பது போல
நீ மறைந்தாலும்
என்றும் உன் பெயர்
உலகில் கலந்திருக்கும்

Offline Paul WalkeR

அன்னை
அவள் அன்பிற்காக
சொர்க்கமும் கூட தவமிருக்கும்

என்னை
நீ காண்பாய் என
உலகமும் உருகி கிடக்கும்

அவள் நெஞ்சில் குடியிருக்க
தெய்வமும்  காத்திருக்கும்

அன்னையின் அன்பே
உலகத்தின் ஆக்ஷிஜென்

அதை சுவாசித்து வாழும்
அனைவரும்  தேவதைகள்


ஒவ்வொரு அன்னையும் பெண்
ஒவ்வொரு பெண்ணும் அன்னை
இதை மனதில் கொண்டு
பெண்மையை போற்றுங்கள்


காலை பணியும்
குயிலின் இசையும்
மலரின் சிரிப்பும்
மழலை மொழியும்
இப்படி அனைத்தும் பெண்மையின் இனிமை


பெண்களை குறை கூறும் மடையனே
பெண் இல்லையேல்
உலகம் ஏது

அதிலும் இந்த கணினி யுகம் எப்படி பிழைக்கும்
முகபுத்தகம் அமிலம் ஊற்றிய முகமாகிவிடும்
வாட்சப்பும் வாடி விடும்


உலகம் உருளுவது பெண்ணாலே
எத்தனை வலிகள்
எத்தனை போராட்டங்கள்
மதி கெட்ட ஆண்கள் நடுவில்
தினம் தினம் வாழ்வதே போராட்டம்
அன்பை மட்டுமே வாழ்க்கையாக
வாழும் அன்னைகளையும் பெண்களையும்
வழிபடும் ஆணாய் இருக்க முயலுங்கள்


அந்த நாளுக்காக


ஐ அம வெய்ட்டிங்
« Last Edit: April 28, 2014, 11:21:28 PM by Paul WalkeR »

Offline NasRiYa

உலகிற்கெல்லாம் ஒரே வானம் போல்
மனித உயிர் இனங்களுக்கு எல்லாம்
இறைவன் தந்த ஒரே அன்னை....
அன்னை தெரசா ....

வறுமையான  வாழ்வில் என்ன என்ன துன்பங்கள்
வயிறு நிறைக்க சோறில்லை,வருஷம் ஒன்றானால்
வயிற்றை நிரப்ப தவறியதில்லை- இருந்தும்,
வாட்டிவதைக்கும் வறுமையில் எத்தனைகஷ்டங்கள்
இருந்தாலும், குவாட்டர், இல்லாத நேரமில்லை,
பிள்ளைகளை படிக்க வைக்க பணமில்லை....

குடும்ப பாரத்தை சின்ன பிஞ்சுகளின் தலையில்
வைத்து, குப்பை பொறுக்க விட்டு,
பத்தும், இருபதுமாய் கொண்டுவரும் காசைக்கூட,
கொடுமை  தகப்பன், பிடுங்கிப்போய் குடிக்க, பாடுப்படும்
இதயம், இளம்பிஞ்சின் மனதும் - எத்துனை
துயர்கொள்ளும் !!!

அ னாவும், ஆ வன்னாவும் அறியாப் பிள்ளையாய்,
பெருக்கலும், கூட்டலும் கழித்திடத் தெரியா
மழலைகளாய் - கண்களில் கண்ணீர்
வயிற்றில் பசி - பாதையோரத்தில் அமர்ந்து
சீருடை அணிந்த மற்ற குழந்தைகளை
ஏக்கத்தோடு காணும் அவலம்.....

இவ்வுலகில் அள்ள,அள்ள குறையாத
அக்ஷயப்பாத்திரமாய்,அன்னையின்
அள்ளிக்கொடுக்கும் கைகள்
தருமனின் மறுப்பிறப்போ,
பாரியின் உயிர்ச்சேர்ப்போ!!!!!

« Last Edit: April 30, 2014, 06:34:02 PM by NasRiYa »

Offline KaniyaN PooNKundranaN

இங்கே உதடுகள் பேசவில்லை

உள்ளங்கள் பேசுகின்றன பார்வையால்

மலர் கொத்தோடு மழலை ஏக்க பார்வை வீசுகிறது

காலம கனியாத கவலை மறையாத

ஒரு குண்டுமணி பருகி அளவாவது உணவு

தருவய என துன் தோழனை பார்க்கிறாள்