அவளை பார்த்த அந்த நொடிகளில் ..
இமைக்க மறந்து தான் போயின என் விழிகள்............
அழகிய தேவதையாய் அவள் என் கண்களுக்கு.........
மழலையின் முகத்தில் உதிக்கும் புன்னகையை .......
அவள் முகத்தில் பார்த்த போது
பறி போனது நான் மட்டும் அல்ல ....என் மனதும் தான் ................
அவளது விழிகளை உற்று நோக்கிய போது .....
அவள் விழிகளின் தேடல்களில்
என்னையும் நான் தொலைத்தேனே .....
குழந்தையை போல் வான வில்லாய் தோன்றிய அவள் அழகில் ..
பெண்ணான நானே உறைந்து தான் போனேன் ....
கற்கண்டாய் இனித்த ,,,
கள்ள கபடமற்ற அவள் பேச்சில் ...
என் மனமும் தான் கரைந்து போனது ...
ஆண்களின் வாயில் இருந்து உதிக்கும் வார்தைகள் மட்டும் தான் ...
பெண்களுக்கு வசந்தமாய்,.... இனிமையாய் தித்திக்குமா என்ன ?
அவள் என் கண்களுக்கு இனிய தோழியாய் ...
பாசமுள்ள தங்கையாய் .....
ஒரு நல்ல தோழியாய் ...ஆவலுடன் சேர்த்து ..
இந்த உலகத்தை நடை போட ஆரம்பித்தன
என் கால்கள் ......
ஒரு சகோதரியாய் அவளுடன் நொடிகளை கழிக்க ஆயத்தமானது என் இதயம் ....
என் வாழ்வில் நான் பெற்ற இன்பத்தை மட்டுமே ...அவளுடன் பகிர்துகொள்ள
தயாரானது என் இதழ்கள் ........
நான் பெற்ற புதிய உறவுடன் ...
வாழ்க்கையில் ஆவலுடன் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தன.. என் கால்கள் ....
இல்லை இல்லை
என் இனிய தோழியின் ..கரம் பிடித்து
இறைவன் எனக்கு கொடுத்த ..அழகிய இன்பமயமான வாழ்க்கைகுள் ..
அவளை அழைத்து கொண்டு
அவள் கரம் பிடித்து..அவள் பின் வர ..
நம்பிக்கையுடன் முன் செல்ல ஆரம்பித்தன என் கால்கள்.....
அப்போது என் மனம் அறிந்திருக்க வில்லை ...
நான் கை கோர்த்து அழைத்து செல்வது ..
குழந்தை வடிவில் தேவதையாய் வந்துதித்த ..
மனித நேயமற்ற கொடூர அரக்கியை என்று ...
நான் என்னையே ஏமாற்றி கொண்டதற்காய் நான் கொடுத்த விலை ....
என் இன்பமான வாழ்கை....
விலை மதிப்பற்ற என் காதல்.....
என் நிம்மதி
நிதர்சனமான உண்மைகளை என் மனம் உணர முன்னரே ...
காலமும் கடந்தது ....
யாவும் முடிந்தது ....
ஒரு நொடியாயினும் யாரேனும் எனக்கு உணர்த்தியிருந்தால்...
ஒரு சிறு கோடிட்டு ஆயினும் காட்டி இருந்தால் .......
இன்று என் நிலை இப்படி இருந்திருக்குமா என்ன ?
என் வாழ்கை இப்படி உருகுலைத்திருக்குமாயென்ன ?
இறைவா ....
என் மனதின் வலிகளையும் ரணங்களையும் நீ மட்டுமே அறிவாய் ......
மூடிய என் விழிகளில் இருந்து ...என்னை மீறி உதிர்த்த கண்ணீர் துளிகள் ..
என்னை சுடுகின்றன ....
போனவை சிலவை ..என்றும் திரும்பிவர போவதில்லை....
இவ் அண்ட சராசரத்தில்
ஒவ்வொருவரின் வாழ்க்கையின் பின்னாலும் ..
இறைவன் நமக்காய் தீர்மானித்து எழுதிய கடமைகளும் .வாழ்க்கையின் அர்த்தங்களும்,வாழ்க்கையின் உண்மைகளும் இருக்கின்றன போலும் ...
ஆம் ...போனவை இனி போகட்டும்.......
வருபவை இனி வாழட்டும் .........
மனித நேயம் மலரட்டும் ...
தெய்வங்களும் இம்மண்ணில் மனிதராய் வந்துதித்து...
இம்மனித வாழ்க்கையை ....வாழ்ந்து பார்க்கட்டும்.. ...
யாரின் துணையும் இன்றி
தனியே என் கால்கள் பயணிக்கின்றன
என் வாழ்க்கையின் தேடலை நோக்கி .......