மழையே!!!!
அன்றோ, உன் மீது எனக்கு வெறுப்பு மட்டுமே...
உனை கண்டாலே எனக்கு பிடிக்கவே பிடிக்காது....
ஏன் எனில், உன்னுடன் கைகோர்த்து ஓடி வரும்..
என் உயிரை துளைக்கும் இடி ஓசையே...
இடி மட்டுமின்றி,
பரந்து விரிந்த.. கருநீல வானில்.. யாரோ ஒருவள்..
நெருப்பு துண்டு ஒன்றெடுத்து... பட்டென வீசியது போல..
என் கண்முன்னே... சீறி பறக்கும்.. வாளின் நுனி போல
கீற்றொளியாய் பட்டு தெறிக்கும் மின்னல் ஒளியுமே...
மேலும்,
வாய் மூடு.. ஏன் இப்படி... ஊஊ.. ஓஓஓஓ.. ஆஆஆஆ...
என ஓசையெழுப்பி எழுப்பி... என்னை பயமுறுத்துகிறாய்...
என்று.. என் விழிகள் கோபத்தில் சிவக்க.. பல நேரங்களில்...
உன்னிடம்... கடும் சண்டை பிடித்து இருக்கின்றேனே ... ...
அச்சமயமெல்லாம்,
நானோ.. மதம் கொண்ட களிறாய்.. பித்து பிடித்தவளாய் ..
என் கைகளிலே.. கிடைத்த பொருள்களை எடுத்ததே...
உன் மீது வீசி வீசி எறிந்து.. என்னுள் உண்டான..
வெறுப்பை எல்லாம் உன் மீது கொட்டி தீர்த்தேனே...
இன்றோ,
நானோ! விளையாட ஆளின்றி... தன்னந்தனியே நிற்க...
என் செவிகளில் தேனென ஒலித்தன.. உன் கட கட... இடியோசை...
என் கண்களும் மகிழ்ந்தென... உன் சர் சர்.. மின்னலொளியிலே.
விழிகளில் கண்ணீர் தழும்ப.. ஓடினேன் என் முற்றம் நோக்கியே...
முற்றத்தில்,
ஆனந்தம்.... என் முகமெங்கம் துள்ளி விளையாடிட ..
ஆர்வமாய்.. நான் வின் நோக்கி உன்னை தேடினேன்..
ஆதவன் ஒளியை நேசித்து.. பருக துடிக்கும் மலராய்...
ஆசையாய் நீயும் எனை தழுவிட.. நானும் சிலையானேன்.. உன் கைசிறையில்!!!!
மழையே!!!..
இன்று முதல்... நீயே என் முதல் விளையாட்டு தோழன்!...
இக்கணம் உன் மீது... எனக்கு சினமில்லை.. வெறுப்பு இல்லை..
இனி நீயே!! என் இனிய தோழன்... முத்தான முதல் நண்பன்...
இவ்வுலகம் இருக்கும் மட்டும் வா... நம் கை கோர்க்கலாம்...