காதல்
ஆதி முதல் அந்தம் வரை மனிதனை ஆட்டிப்படைப்பது காதல். ஆதம் ஈவாள் முதல் அம்பிகா அமராவதி வரை காவியம் படைத்த காதல்கள் பல. காதலுக்காக உயிரே பிரிந்தாலும் அந்த காதல் அழியாமல் சரித்திரம் படைத்தவர்கள் பலர். ஆனால் இன்று?
காதல் ஒரு பொழுதுபோக்கு. பார்த்ததும் காதல், பார்க்காமலும் காதல். SMSஇல் காதல், இன்டர்நெட்டில் காதல். இப்படி பலவிதமான காதல்கள். இவை அனைத்துமே வானவில் காதல் என்றும் சொல்லாம்.
அழகுக்காக, பெருமைக்காக, பொழுதுபோக்குக்காக காதல் செய்யும் ஆண்கள் பல பலர்.
தங்கள் தேவைகளுக்காக. கிரெடிட் கார்டு ஆகா பசங்களை காதலிக்கும் பெண்களும் பலர்.
உண்மையான காதலர்களும் உலகில் இருக்கிறார்கள். அதையும் நாம் மறுப்பதற்கில்லை.
இதுவல்ல எனது கரு. இத்தகைய காதல்கள் தோல்வியில் முடியும் போது இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா இல்லை பெண்களா? யார் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்?
அதிகம் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் பெண்களே. இதுவே எனது வாதம்.
இல்லை aangal தான் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வாதங்களை இங்கே வைக்கலாம்.
நண்பர்களே இது ஒரு கருத்தைப் பதியும் களம். இதில் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பதியலாம். ஆனால் யாரது மனதையும் பாதிக்காத படி பார்த்துக் கொள்வது நமது கடமை. இது ஒரு ஆரோக்கிரமான அறிவுபூர்வமான அமைய வேண்டும் என்பதே எனது அவா. நன்றி.