சகோதரி தர்ஷினி கொடுத்துள்ள இப்புகைப்படத்திற்கு இந்தியாவின் தண்டகாருன்ய காடுகளை நம்பி வாழும் பழங்குடியின மக்களை பன்னாட்டு தொழிற்சாலைகள் அங்குள்ள கனிம வளங்களை சுரண்ட வேண்டும் என்பதற்காக அங்கு ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்து வரும் அப்பாவி பழங்குடியின மக்களை வெளியேரசொல்வதும் அதற்க்கு இந்திய அரசாங்கமும், இந்திய அரசபடைகளும் அம்மக்களை படுகொலை செய்து வருவதையும் அறியாதவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற முயற்சியில் இக்கவிதையை எழுதுகிறேன்.
மழை வளம் காக்க
மரம் வளர்ப்போம்! - என்று கூறும்
இந்திய அரசே!
நீ சொல்வது ஒன்றும்
செய்வது ஒன்றுமாக...
உள்ளதே ஏன்?
ஆண்டாண்டு காலமாய்
காடுகளை நம்பி வாழும்
அப்பாவி மக்களை வெளியேற
சொல்வது ஏன்?
தண்டகாருண்யா காடுகளை...
பன்னாட்டு தொழிற்சாலைகளிடம்
அற்ப லாபத்திற்காய் தாரைவார்த்து
கொடுத்தது ஏன்?
அக்காடுகளை நம்பி வாழும்
அப்பாவி மக்களை...
ரோடுகளில் நிறுத்தியது ஏன்?
அம்மக்களுக்கு கல்வியும்,
சுகாதாரமும், வாழ்வாதாரமும்
வழங்கவேண்டிய அரசே அவர்களை...
அல்லல்பட வைத்தது ஏன்?
இத்தனையும் தட்டிக்கேட்ட
அப்பாவி மக்களை...
கோப்ரா பட்டாளியன்களை அனுப்பி...
கொன்று குவித்தது ஏன்?
கொன்றதோடு விட்டதா
இந்திய அரசபடை என்றால்...
இல்லை இல்லை இன்னும் உள்ளது
இவர்கள் செய்த அட்டூழியங்கள் என்று...
நீண்டு கொண்டே போகிறது பட்டியல்!
அங்கு வாழும் என் தாய்மார்களும்,
சகோதரிகளும் இந்திய அரசபடையால்...
மானபங்கம் படுத்தப்பட்டார்கள்...
இது உச்ச கட்ட வேதனை!
இந்திய அரசே! இந்திய அரசே!
நீ மக்களை வாழவைக்க வந்தாயா?
வாழ்வருக்க வந்தாயா?
எழுகிறது சந்தேகம்!
தண்டகாருன்ய காடுகளின்...
செழிப்பிலே இதுவரை
ஆனந்த கண்ணீர்(மழை) விட்டது...
வான் மேகங்கள்!
இனி அக்காடுகளின்...
அழிவிலே இரத்த கண்ணீர்...
வடிக்க காத்திருக்கிறது...
வான் மேகங்கள்!
உள்ளம் எல்லாம் கொதிக்கிறது...
இக்கொடுமைகளை பார்க்கையில்!
வல்லரசு கணவிலே நல்லரசை
கோட்டை விட்ட இந்திய அரசே!
நீ சிந்திக்க வேண்டும்!