குளிர்காலத்தின் இறுதியிலும், கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக வரும் காலம் தான் வசந்த காலம். இந்த காலத்தில் பகல் நேரம் அதிகமாகவும், இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். இவ்வாறு பகல் மற்றும் இரவு பொழுதுகளின் நேரம் மாறுவது மட்டுமின்றி, காலநிலையும் மாறுபடுகிறது. இத்தகைய காலநிலை மாறுபடுவதால், நிறைய வகையான காய்கறிகளும், பழங்களும் மார்கெட்டில் கிடைக்கும் என்று அர்த்தம். உதாரணமாக, ஆரஞ்சு பழமானது பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் அதிகம் கிடைக்கும் ஒரு குளிர்கால பழம். ஆனால் இந்த பழம் வசந்த காலத்திலும் கிடைக்கும்.
பொதுவாக அனைத்து பழங்களுமே அனைத்து நாட்களும் கிடைக்கும். ஆனால் அதனை சீசன் போது மட்டுமே அதிகம் சாப்பிட முடியும். ஏனெனில் அப்போது தான், அதன் விலையானது மிகவும் மலிவாக இருக்கும். தற்போது வசந்த கால முடிவு மற்றும் கோடை கால ஆரம்பம் என்பதால், இந்த காலத்திலும் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும். உதாரணமாக, அஸ்பாரகஸ், அவுரிநெல்லிகள், ஆப்ரிக்காட் மற்றும் பூண்டு போன்றவை அதிகம் கிடைக்கும்.
இப்போது வசந்த மற்றும் கோடை கால பழங்கள் மற்றும் காய்கறிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை வாங்கி சாப்பிட்டு, கோடைகாலத்திலும் வசந்தமாய் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.