Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 21055 times)

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #165 on: November 25, 2023, 07:00:17 AM »
குறள்:165
  அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.


விளக்கம்

   கலைஞர் விளக்கம்:
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும். 

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #166 on: November 26, 2023, 09:18:45 AM »
குறள் :166

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.


விளக்கம்:

.மு.வரதராசன் விளக்கம்:
பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும். 

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #167 on: November 27, 2023, 11:53:52 AM »
குறள்: 167

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். 


விளக்கம்:

      சாலமன் பாப்பையா விளக்கம்:
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.    [/b

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #168 on: November 30, 2023, 07:59:51 AM »
குறள்:168

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.


விளக்கம் :

    கலைஞர் விளக்கம்:
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.   

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #169 on: December 03, 2023, 07:10:48 AM »
குறள்:169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.


விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:
பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.   

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #170 on: December 03, 2023, 11:20:15 PM »
  குறள்: 170
  அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். 


விளக்கம்
      சாலமன் பாப்பையா விளக்கம்:
பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.   

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #171 on: December 05, 2023, 07:44:33 AM »
குறள்:171

அதிகாரம் : வெஃகாமை


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். 


விளக்கம்:

 மு.வரதராசன் விளக்கம்:
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும். 
« Last Edit: December 06, 2023, 06:45:52 AM by mandakasayam »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #172 on: December 06, 2023, 06:36:12 AM »
குறள் :172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.


விளக்கம்:

கலைஞர் விளக்கம்:
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈ.டுபடமாட்டார்.   

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #173 on: December 07, 2023, 11:51:42 AM »
குறள்:173

  சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.


விளக்கம்:

    சாலமன் பாப்பையா விளக்கம்:
அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்   

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #174 on: December 09, 2023, 06:52:47 AM »
குறள்: 174

  இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர் 


விளக்கம்;[
    மு.வரதராசன் விளக்கம்:
ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார். 

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #175 on: December 12, 2023, 12:35:10 PM »
குறள்: 175

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.   


விளக்கம்:

   சாலமன் பாப்பையா விளக்கம்:
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.   

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #176 on: December 14, 2023, 11:07:29 AM »
குறள்:176

  அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.


விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈ.டுபட்டால் கெட்டொழிய நேரிடும்.

   

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #177 on: December 18, 2023, 08:44:14 AM »
குறள்: 177

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். 


விளக்கம்:

   மு.வரதராசன் விளக்கம்:
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும். 

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #178 on: December 24, 2023, 06:10:58 AM »
குறள்:178
 
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.


விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

 

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 381
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #179 on: December 26, 2023, 07:48:25 AM »
குறள்:179

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. 


விளக்கம்:

சாலமன் பாப்பையா விளக்கம்:
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.