ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 160
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/160.png)
பெற்றோர்களின் உதவியால்
குருவின் வழிகாட்டியால்
நம் முயற்சியால் அறிவை வளர்க்க
கல்வி என்ற வாகனத்தில் ஏறினேன்
அரைமணிநேர படிப்பு
அதிலும் அரட்டை சிரிப்பு
ஆசிரியர் வந்தால் நடிப்பு
பரீட்சை முடிவுகள் என்றல் துடிப்பு
பத்துவருடங்கள் பட்டம் பூச்சி போல்
சுதந்திரமாய் நண்பர்களுடன் சுற்றி
திரிந்த என் வாழ்க்கையில்
மாற்றத்தை ஏற்படுத்த வந்த ஒரு ஆசான்..
பிரம்பு கொண்டு துன்புறுத்தவும் தெரியாது
கோபத்தால் அடிமைப்படுத்தவும் தெரியாது
ஆலோசனை என்ற பெயரில்
கொல்லாமல் கொல்லவும் தெரியாது
அன்பு காட்டுவதில் அம்மா
அமைதியின் சிகரம்
என் மனதில் இடம் பிடித்த
மகாலட்சுமி ஆசிரியை.
என் ஆறாம் அறிவுக்கு கல்வி புகட்டி
கல்வியின் நோக்கம் தகவலை திணிப்பது அல்ல
கல்வியை காதலித்து அறிவின் தாகத்தை
தூண்டுவது ஆகும்
என உணரும் விதமாய்
வாழைப்பழத்தை உரித்து கொடுக்காமல்
ஊட்டி விட்டு அதை விழுங்குவதற்கு
உந்துகோலாக முயற்சி செய்ய
கற்று கொடுத்தவர்..
என் பள்ளி படிப்பின் கடைசி வருடத்தில்
கல்வியை முழுதாக கற்றுக்கொண்டு
நாளைய சமுதாயத்திற்கு
நல்ல மாணவியாக
பள்ளி கல்வி என்ற வாகனத்திலிருந்து
இறங்கியதை நினைவு கூர்கிறேன்..