தாய்பாலின் மணம் என்னுள் தங்கி நிற்கையிலே
பொருட்பாலை என்னுள் புகட்ட வந்தவனே !
அன்னைமொழி புகட்ட அவள் அரும்பாடு பட்டுவிட்டாள்
என்னை நீ படிக்கவைக்க எவ்வளவு படுவாயோ ?
சட்டை பொத்தானை சரியாக போடலையே
பரட்டை தலை இன்னும் நான் ஒழுங்காக வாரலயே
ஏட்டை தினம் புரட்டி தினம் எத்தனையோ நீ புகட்டி
வீட்டை நான் காக்கும்வகை எப்படித்தான் செய்வாயோ?
ஒரு பிள்ளை என் சேட்டை பொறுக்கலேயே பெற்றோரால்
தெரு எல்லாம் என் பெயரை நித்தம் வெறுக்கையிலே
கருவாக சுமந்தவளும் கண்ணீர் வடிக்கையிலே
குருவாக நீயும் வந்து என் குறைகள் களைவாயோ ?
முட்டி போட வைத்தாய் முழங்காலு வழித்ததப்போ
தட்டி கொடுத்தும் வைத்தாய் , தடியால் அடித்துவைத்தாய்
உளி கொண்டு நீ செதுக்கி , இப்போ உருப்பெற்று நிற்கின்றேன்
பட்டமதை நீ வாங்க என் பக்கத்தில் வருவாயோ ?
அ கரத்தை நீ சொல்லி
ஆ காரம் பருக வைத்தாய்
இ ன்றும் நினைவில்
ஈ சனை போல் தொழுகிறேன் !
உ ன்னை பாராட்ட
ஊ ர் கூடி அழைக்கின்றேன்
எ ன்றும் என் வாழ்வில்
ஏ ற்றம் காண உழைத்திட்ட
ஐ யா உன் பெயரை
ஒ ருமுறை அழைக்கின்றேன்
ஓ டி நீயும் வந்திடுவாய் .....