சிற்பியும் உளியும்
உளியெடுத்து உயிர்கொடுக்கும் உழைப்பே,
கல்லெடுத்து சிலைவடித்த கலையே!
உன் கற்பனை மூலம்,
பல கடவுள்கள் -
இங்கே காட்சிபிழையாய் நிற்க..
பல தலைவர்கள் - உன் உளியில்
இங்கே ஆட்சி பிழைகளாக நிற்க!
நீ கண் இமை செதுக்கும் காட்சி,
சிலந்தி வலை பிண்ணும் நேர்த்தி,
தூக்கனாங்குருவியின் பேய் -
பிடித்துருக்குமோ உன் விரல்களுக்கு??
உன் விரல்களில் சிலை பிரமிப்பு!!
பெண் எல்லாம் சிலையாக,
ஆண் எல்லாம் பிணமாக!
நீ அதிகார மூலையில் ஏறி
செதுக்கிய சிலை காலத்தின் நேர்த்தி!!
ஆம் பெண் கருத்தரிக்காவிட்டால்,
ஆண்கள் பிணங்களே!!!
நீ பாறையெடுத்து படைத்த பெரியகோவில் -
ஈசனுக்கே ஓர் வரலாற்று பிறப்பு!!
பளிங்கி கல் உடைத்து செதுக்கிய தாஜ்மகால்-
ஷாஜகான் மும்தாஜின் கனவு இல்லம்!!
பிணங்களுக்காய் பிடித்துவைத்த பிரமீடு - அந்த
பிணங்களுக்கே ஓர் பிரமிப்பு!!
தலைசாயாமல் சரிந்து நிற்கும் பைசா கோபுரம்-
உன் உளியில் விளிம்பில் நிற்கும் அதிசயம்!!
உன் விரலால் நீண்ட சீன பெருஞ்சுவர்-
பெரும் கட்டிடகலைக்கே ஓர் வரலாற்றுச் சாரம்!!
இவர்கள் எல்லாம் உளியால் உயர,
வருத்தம் இருவருக்கு மட்டும்??
அகத்தியர் போல் சிறு உளியாயிருந்து,
பலரின் வாழ்வை உயர்த்திய உளியே,
நீ மதிப்பு மிக்கவன் என்பதால் உனக்கொரு வேண்டுகோள்!
பிஞ்சு கைகளிடம் தஞ்சம் ஆகாதே!!
அந்த பாவம் உன்னை விடாது!!
குழந்தை தொழிலாளிகளாய் கேள்விக்குறியாய்,
அவர்கள் வாழ்க்கை உன்னால்???
பல்லிழிக்கும் பகல்பொழுதில்,
உன்னை விரலில் பிடித்து பாறை உடைக்கும்,
பாவப்பட்ட தினக்கூலிகளை உயர்த்த,
எனக்காய் அவர்களுக்கு,
இன்னும் ஓர் வரம் கொடு!!!
இவன் ,
இரா.ஜெகதீஷ் ..