Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
ஆன்மீகம் - Spiritual / Re: Bible Verse of the Day
« Last post by MysteRy on Today at 02:15:08 PM »
2
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 07:57:52 AM »
3
நாள் ஒன்றில் "நட்பு" கொண்டோம்!
நட்பில் நல்லதொரு "பாசம்" கண்டோம்!!

கண்கள் காணாதிருப்பினும் காத்து கிடந்தோம்!
கள்ளத்தனமாய் "காதல்" கொண்டோம் 😉!!

அறியாதிருப்பினும் ஆர்வம் கொண்டோம்!
பல உறவுகள் நட்பில் நகைத்து போனோம்!!

"உறவுகள்" என்றும் உயர்வானதே!
அதை உள்ளத்தினால் உறுதிகொள்வது சிறப்பானதே!!

உறவுகள் என்பவை அழியாததே!

(உறவுகள்)அதை ஒன்றிணைத்த   ❤️FTC❤️
உயர்வானதே ❤️..

உறவுகளே!!

தொலைவில் இருப்பினும், தொடர்பில் இருப்பவன் நேசகன்.

ஆகவே நீங்கள் தொலைவில் இருப்பினும், என்றும் தொடர்புலேயே இருங்கள் ❤️❤️❤️.


இப்படிக்கு.

என்றும் என் உறவுகளை மறவா நேசகன்.
MN. AHAMED AARON........


4
POEMS / Re: Un Ninaivu
« Last post by Ishaa on Today at 02:26:10 AM »
Padithathil pidithathu!

Maaravum mudiyala.
Marakavum mudiyavillai.
Kannai moodinaal kanavagavum.
Kannai thiranthal ninaivaga
Varugirai!

Quoted!
5
General Wallpapers / Re: Sky Pics 🌄🌅 and Nature Pics🌿🌳
« Last post by Ishaa on Today at 02:00:55 AM »






*13.04.2023* 7.30pm *

Problem face pannurathu. Emotionally down time face pannurathu ellam normal than. Athu illathi than abnormal life.
But etharkaga ithu face pannuringa enru konjam evaluate pannunga. Anthe tough time la mudiyathi after u faced it evaluate pannunga.
Ippo for example fever vanthichu enra. Tab podhu fever poga veikurom. But fever ennathukku vanthichu enru kandupidicha than athu again varama thadukalam. Illaiya? Fever ae treat panna than venum. But fever vantha reason a treat pannuna than again fever varama irukkum.
Problem/emotionally down time ean vanthichu enru reason kandu pidinga.
Inthe sunset pole, all are the same sunset, same time but naan sollathi u would ve thought ellam different pic enru la?!  Get different views from ur problem.
Reason a eliminate panna parunga. Appadi mudiyathi.
Find out which things give u energy and which consume ur energy.
Ethu ungalukku athigam energy tharutho athe pannunga. And dont hesitate to cut the things that consume ur energy!!!
Consuming ur energy can also be a person or a bad habit. Anything, but try to avoid and cut. Udane ellam cut pannurathu kastam than. But make a step forward. 


Embrace the struggle and let it make you stronger. It won't last forever.


We r getting stronger.
I am getting stronger
Happy Weekend
7
 :🥰🥰🥰🥰
8
நண்பர்கள் அரட்டை அரங்கம் !

இது தமிழர்களின் அன்பின் திண்ணை!

மனதில் நிறைந்த மகிழ்ச்சியுடன் பதிமூன்றாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறாய்! உமக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

உலகின் எல்லா எல்லையிலிருந்தும் தமிழர்கள் உன்னிடத்தில் கூடுகின்றனர்!
அன்பும் அழகும் கலந்த நண்பர்கள் அனைவரும் ஓருயிராய் உன் அரங்கத்தில் நின்று அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்!

தனிமையின் கொடுமையைக் கொல்லும் உன்னத நண்பன் நீ!

சிரிப்பை மறந்தவர்களைக் கூட சிரிக்கை வைக்கும் அற்புத அழகன் நீ!

முகம் தெரிந்தவர் கூட பேசத் தயங்கும் காலத்தில் முகமறியா நண்பர்களை ஒன்றிணைத்து ஓரு பூந்தோட்டத்தை உருவாக்கிய உத்தமன் நீ!

இணையம் என்ற சொல்லின் பயத்தைப் போக்கி நண்பர்களின் இதயங்;கள் இணையும் பூங்காவனம் ஆக்கினாய் நீ!

இங்கு நண்பர்கள் யாராவது சாப்பிட்டாயா. நலமா என்று கேட்டாலெ ஏதோ கடவுளே நெரெ வந்து கேட்டது போல் மனம் குளிர்ந்து குதூகலிக்கும் தனிமையில் வாடும் நண்பர்களை உறவுகளைப் போல் உணர வைத்தவன் நீ!

பேருந்து பயணத்திலும். ரயில் பயணத்திலும் உன்னுடனே பயணம் செய்து அந்த பயணத்தை தினம் தினம் உல்லாச பயணம் ஆக்குபவன் நீ!

உறவுகளைத் தொலைத்தவர்களும். உறவுகளை விட்டு தொலைதூரத்தில் இருப்பவர்களும். அந்த உறவுகளை இங்கே காண்கின்றனர் சகோதரனாய், சகோதரியாய், நண்பனாய்,. நண்பியாய், சமயத்தில் அன்பை வெளிப்படுத்தும்போது அன்னையாய், தந்தையாய் கூட!

நலனில் அக்கறைக் கோண்டு சேல்லமாய் கண்டிக்கும் நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் என அத்தனை உறவுகளையும் காணலாம் உன்னிடத்தில்!

இத்தனை பெருமைகளைக் கொண்ட கோச்சடையான் நீ!

வெறும் பேச்சோடு மட்டுமல்லாமல். நண்பர்களின் அற்புதமான ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து அவர்களின் திறமைகளை அவர்களையும் நண்பர்களையும் உணரச்செய்து மகிழ்விக்கும் அற்புத படைப்பாளன் நீ!

உன் இசைத்தென்றல் நிகழ்ச்சி இசைவிருந்து கொடுத்து இன்பம் தந்திடும்!

ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சி கவிதைப் பிரியர்களின் மனதைக் கொள்ளையடித்துச் செல்லும் அதன் வர்ணணையாளரின் குரல் வெளிப்பாட்டில்!

நேயர்களின் விருப்பப் பாடல்களும், வானொலிப் பாடல்களும் எந்நேரமும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்!

வர்ணணையாளர்களின் வார்த்தை குரல்களும். பேச்சு நடையும். வாசிக்கும் அழகும் படைப்பாளர்களின் படைப்புகளுக்கு மேலும் மெருகூட்டும் !

உனது அரங்கத்தின் பொது மன்றம் (Forum) பக்கம் ஒன்று போதும் உனது பெருமையப் போற்ற!
இத்தனை பெருமைகளுக்குச் சொந்தக்காரனனான நண்பர்கள் அரட்டை அரங்கம் என்னும் நண்பனே! என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த தோழனே!

பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இம்மகிழ்ச்சியான தருணத்தில் நான் உன்னுடன் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்!

நீ மென்மேலும் வளர்ந்து எண்ணற்ற நண்பர்களை ஒன்றிணைத்து அவர்களின் உள்ளங்கவர் கள்வனாய்! என்றும் மார்க்கண்டேயனாய்! இதே உற்சாகத்தினோடும். அன்போடும். கலைஞர்களின் வர்ணஜாலங்களின் ஜொலிப்போடும். ஒற்றுமையோடும் பயணம் செய்ய எனது சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்!!

வாழ்க பல்லாண்டு!! வளர்க நின்புகழ் மென்மேலும்!!   


9
    நாள்தோறும் நம்முடன் தொடரும் பந்தமே!!   தினசரி உன்னுடன் இணைய தவறியதே இல்லை .. நண்பர்களின் நட்பை சொல்ல வார்த்தைகள் ஏது?   

 பல நட்பினை ஒன்று சேர்த்து மாபெரும் படைப்பாய் நிலைத்து நிற்கிறாய்!! எண்ணிலடங்கா உறவுகள்  ஏற்ற தாழ்வற்ற ஒற்றுமைகள் சமமாக கடைபிடிக்கப்பபடும்  நியதி,!!!

இணைய நட்பு தானே என நினைத்து பார்க்க முடியுமா, ஒவ்வொரு நாண்பர்களிடத்தில் அத்துனை பிரியம்,  .பாகுபாடு அல்லாத பண்புகள் சில முரண்பாடுகள் வந்தாலும் காலப்போக்கில் மறதியே மறு ஆக்கம் செய்யப்படுகிறது!!

  நமது நண்பர்கள் தமிழ் அரட்டை அரங்கத்திற்கு முதுகெலும்பு பொது மன்றம் தான் ...
   
திறமைசாலிகளின் அடிச்சுவடு பல சிந்தனைகளை தூண்டவைப்பதும் நீயே! பல படைப்பாளிகளை உருவாக்கும் ஓர் அற்புதம் உன்னில் தான். 
 
முடியாதென நினைப்பவர்கள் கூட முயல வைக்கும் உனது தொகுப்புகளும் கோப்புகளும் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் போல் அருவியாய் காட்சியளிக்கிறது!!!!

பதிமூன்று ஆண்டுகளில் பல இதயங்களை கவர்ந்த நாயகனே உன்னுடன் நானும் ஒருவன் என்பதில் பெரும் இன்பமே எனக்கு!!

ஆண்டு விழாவின் அரசனே
மேலும் பல சாதனைகளை தொடர இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

!!நண்பர்களால் நண்பர்களுக்காக!!



10
நட்பெனும் உறவும் நம்மிடம் வரவே
நல்துனையாக இத்தளம் கண்டேன்
கற்பனை சிறகை நீட்டியும் பறக்க
வானுமுமிதுவே என்று நான் பறந்தேன்
நண்பர்கள் கோடி நயமுடன் கூடி
சிந்தனை வளர்க்கும் சங்கதி பேசி
இங்கிதம் யாவும் நமக்குள் விதைத்து
சங்கீதம் கூட நமக்காய் இசைத்து
பொங்கிடும் இன்பம் என்றும் அளித்து
சங்கடம் சற்றே மெல்லமாய் அழித்து
கல் மனம் இன்று மெல்ல கரைத்து
கனிவுடன் என்னை பேச பணித்து
சொற்களின் சுவையை அள்ளி தெளித்து
பேசிடும் மாந்தர் தண்ணில் நுழைத்து
என்னையும் ஆளாய் ஆக்கி மகிழ்ந்த
நண்பர்கள் தமிழ் அரட்டை தளத்தை
இன்றுநான் தமிழில் வாழ்த்திட வந்தேன்
என்றுமே நீயும் வாழியவே
Pages: [1] 2 3 ... 10