FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: AgNi on October 27, 2020, 08:24:57 AM
-
அந்த அழகிய காலை வேளையில் அந்த ஆறு சலனம் அற்று ஓடி கொண்டு இருந்தது ...கூழாங்கற்கள் தண்ணீரை படியவைத்து பளிங்கு போல ஓடி கொண்டு இருந்தது ..பறவைகள் நீரின் மேலே பறந்து பறந்து விளையாடி கொண்டு இருந்தது ...
சில் என்ற குளிர் காற்று முகத்தில் மோத கயல்விழி கையில் குடத்துடன் அங்கே வந்தாள். நீர் எடுக்க வந்தவள் இயற்கையின் அழகில் சிறிது நேரம் மயங்கி நின்று ரசித்து கொண்டு நின்றாள் . பின் குனிந்து ஒரு கல்லின் மேல் அமர்ந்து பாதங்களை நீரில் அமிழ்த்தினாள் . மெதுவாக அவள் உதடுகள் அவளுக்கு பிடித்த ஒரு பாடலை முணுமுணுத்தது.
கண்ணாடி போன்ற நீரை அவள் கையில் எடுத்து நீரின் மேலயே தெளித்து விளையாடி கொண்டு இருந்தாள்..சிறு கெண்டை மீன்கள் அவள் பாதங்களை தொட்டு விமோசனம் பெறுவது போல அருகில் வருவது ஓடுவதும் ஆக விளையாடி கொண்டு இருந்தது.அதை பார்த்து கல கல வென சிரித்தாள்..
அப்போது மற்றும் ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது ..அது ஒரு ஆணின் குரல் ..திடுக்கிட்டு திரும்பினாள் .அங்கு அழகே உருவாய் ஒரு ஆடவன் நின்று கொண்டு இருந்தான் ..குளிக்க வந்தவன் போல...
அவள் தடுமாறி எழுந்தாள் உடனே அவ்விடம் விட்டு போக நினைத்து ..
அவன் க்ரிஷ் தடுமாறி விழா போனவளை கையை ஓடித்து நிறுத்தினான் .
" ஏன் பயப்படறீங்க ..உங்க பாதம் தொட்டே மீன்கள் ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கணுமே .." என்று புன்னகைத்து சொல்ல ...அவளுக்கு வியர்த்து விழித்தாள் ...
கண்கள் அலைபாய " நான் போகணும் " என்று முனு முனுத்து அவன் கை பிடியில் இருந்து விடுவித்து கொண்டாள்.
அவன் ஆழமாய் அவளை பார்த்து ..உங்க பேரு மீனா தானே என்று கேட்டான் .அவள் அவன் முகத்தை பார்த்து இல்லை என்று தலை ஆட்டினாள் .அந்த கணம் அவன் முகத்தை பார்த்து ரசித்தும் விட்டாள்.. எவ்ளோ அழகான ஆண்மையான முகம் என்று..மறுகணம் செய் இதென்ன நினைப்பு என்று தலையை உதறி நடக்க துவங்கினாள்.
ஆனால் அவன் விடுவதாய் இல்லை..கூடவே நடந்தான் .." பொய் தான சொல்றிங்க..கண்டிப்பா உங்க பேரு மீனா தான்..என்றான் ...அவள் மறுபடியும் தலை ஆட்டினாள் இல்லை என்று .
க்ரிஷ் "அதெப்படி உங்க பேர மீனா இல்லாம இருக்கும் ? என்று கேட்டான் .
அவள் ஒரு பார்வை பார்த்தாள் இவன் ஒரு லூசா என்று .
அவன் அவளின் அந்த விழிகளை பார்த்து கொண்டே " இல்லைங்க ..உங்க கண்கள் அப்டியே மீன் போல இருக்கே..சோ உங்க பேரு மீனா தானே இருக்கும் " என்றான் ரகசியம் போல கயல் உண்மையாக திடுக்கிட்டு போனாள். எப்படி சரியாக சொல்கிறான் .?
அவள் முறைத்து பார்த்தாள் அவனை .கிரிஷ் தலையை உலுக்கி கொண்டான் ..: ஐயோ இப்டி பார்க்காதீங்க ..நான் அம்பேல் !" என்று ஏதோ கற்பனை உலகில் மிதப்பவனை போல பரவசமாய் சிரித்து கொண்டு இருந்தான் .
கயல் அவனை வினோதமாக பார்த்தாள்.முன்னே பின்னே பெண்களை பார்த்தே இலையோ இவன் என்று .. ஒரு படபடப்புடன் வேகமாக நடந்தாள் . அவன் பின் தொடர்ந்தான் . ஹெலோ ..மீனம்மா ... நிஜமா உங்க கண்ணுக்கு நான் அடிமை ஆகிட்டேங்க...என் பேரு க்ரிஷ் ...இங்க உங்க ஏரியா தான் இருக்கேன் . டிகிரி முடிச்சிட்டு IAS கு படிச்சுட்டு இருக்கேன்...ஏதவது பேசுங்களேன் ..என்று கெஞ்சியவாறு நடந்தான் .
அவள் தலையை நிமிர்த்தி பார்த்தாள் "போயி உங்க படிக்கிற வேலையை பாருங்க ..ஆல் தி பெஸ்ட் ".. என்று விட்டு நடையை தொடர்ந்தாள்.
அவன் மிகவும் மகிழ்ந்து போனான் அதற்கே ..வாவ் எவ்ளோ அழகா பேசுறீங்க ..அதெல்லாம் நல்ல படிச்சு கலெக்டர் ஆகி உங்கள கல்யாணம் பணிக்க வர போறேன் பாருங்க " என்றான்.
கயல் விழி அதிசயமா பார்த்தாள் அவனை ..பார்த்து 5 நிமிடம் இருக்காது ..அதற்குள் கல்யாணம் வரை பேசுகிறான் என்று .க்ரிஷ் " என்னங்க அப்டி பாக்கறீங்க..நான் தப்பான ஆள் இல்லை மீனம்மா...நிஜமாத்தான் சொல்றேன் . அதுவரை உங்க நியாபகமா இந்த மோதிரம் வெச்சுக்கிறேன் என்றவன் அவள் விரலில் இருந்த மோதிரத்தை படக் என்று உருவி எடுத்து கொண்டு பைபை மீனம்மா ..என்று சென்று விட்டான் .
அப்படியே அவன் சென்ற திசையை பார்த்து விதிர்த்து நின்றாள் . அவளை ஒருவன் அழகி என்று சொன்னதும் இல்லாமல் கல்யாணம் வரை பேசி விட்டு காதல் சின்னமாய் மோதிரத்தையும் எடுத்து சென்று விட்டானே ..அவள் உடல் சிலிர்த்து மெய் மறந்து போனாள் .அவள் மனம் முழுதும் அவன் நிறைந்து இருந்தான் . அவளும் காதலிக்கிறாளா அவனை? நெஞ்சம் முழுதும் இன்பம் பொங்க உடல் சிலிர்க்க ......திடுக்கிட்டு விழித்தாள் கயல்விழி .. அத்தனையும் கனவா?
(தொடரும் )
-
agni kathai super ma :P krish really talented evalo nice ha pesi mothiratha ataiya potutan :o ;)
-
கல்யாணம் வரை பேசி விட்டு காதல் சின்னமாய் மோதிரத்தையும் எடுத்து சென்று விட்டானே!! super wording sis . waiting for the part 2
(https://i.postimg.cc/Y26vfKZm/180717-engagement-ring-ac-620p-49c4dea2eae511182ac76f2321fcb631-nbcnews-fp-1024-512.jpg)
-
Nice story agni. Ithu than love at first sight ah
-
வாவ் good start சிஸ், லவ்லி ஸ்டோரி சிஸ்.. waiting for next episode.. நீங்க ரியலி talented person
-
இணைய தமிழ ! ஸ்டார் பேபி ! ட்ராகோ ! நிஞ்ஜா அனைவர்க்கும் மிக்க நன்றி ! உங்கள் அன்பும் ஊக்குவித்தல் பண்பும் என்னை மகிழ்ச்சி கொள்ள செய்து மேலும் பல படைப்புகளை உருவாக்க உற்சாகம் தருகின்றது ! அன்பும் நன்றியும் ! :D :D
-
அந்த மின்விசிறி அவ்வளவு வேகமாக சுழன்றும் வேர்த்து வடிந்தது கயல்விழிக்கு .கைகளால் நெற்றியை துடைத்து எடுத்தாள்..இருந்தும் வியர்வை ஆறாக பெருகியது .எங்கோ கயல்மா என்று அவளை அழைக்கும் சத்தம் கேட்டது.மெல்ல படுக்கையை விட்டு இறங்கி அறையை விட்டு வந்தாள்.
அவள் அத்தை வசந்தா காபியை கையில் வைத்து கொண்டு நின்றுக்கொன்று இருந்தாள்.:
" எழுந்திட்டியா கயல் ...சுந்தர் வாக்கிங் போய்ட்டு வந்துட்டாப்ல ..காபி கொடு " என்று கப் நீட்டினாள் .சரி அத்தை என்று வாங்கி முன்பக்க வராண்டா நோக்கி நகர்ந்தாள் .
அங்கு சுந்தர் பேப்பர் படித்து கொண்டு அமர்ந்து இருக்க ...இந்தாங்க காபி என்று கயல் கொடுத்தாள்.
நிமிர்ந்து பார்த்த சுந்தர் "குட் மோர்னிங் டியர் !" என்றவன் அவளின் முகத்தை பார்த்து ...:"என்ன ஆச்சு கயல் ..ஏன் முகம் இப்டி வேர்த்து இருக்கு "...என கேட்டான் .கயல் அவசரமாக தலை ஆட்டி" ஒன்னும் இல்லைங்க..: என்றாள் வியர்வையை துடைத்து கொண்டே ...
காப்பியை குடித்து கொண்டே கண்களை உயர்த்தி பார்த்தான் சுந்தர் ...:"அப்டி தெறியலயே ....ஏதும் போன் வந்துச்சா ? எனி ப்ரோப்லேம்? "
" " அப்படி ஒன்னும் இல்லைங்க " என்று திக்கினாள்.
அவளை வியப்புடன் பார்த்தவாறு "என்னமா ஆச்சு ? ஆர் யு ஓகே ?" என்று அவளிடம் கையை நீட்டினான் ..கயல் ஒருவாறு சமாளித்து புன்னகைத்து அவன் கையில் தன் கை வைத்து "நிஜமா அயம் ஆல்ரைட் ...நீங்க குளிச்சு ஆபீஸ் கிளம்புங்க " என்றாள் .
சுந்தர் "அப்போ சரி ..நான் கிளம்புறேன் " என்றவன் அவளிடம் அருகில் வந்து அவள் கண்களை பார்த்தான் .அதில் தெரிந்த எதோ ஒன்று அவனுக்கு அவள் சரி இல்லை என்று உணர்த்தியது போலும் .
அவள் முகத்தை ஒற்றை விரலில் நிமிர்த்தி அவள் கண்களை பார்த்தவாறே சொன்னான் ." கயல் மா....நீ மனசிலே எதோ பயந்து இருக்கேனு தெரியுது ..என்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை...பட் ..எதுவா இருந்தாலும் சரி பணிக்கலாம்....நீ தேவை இல்லாம கஷ்டப்படாதே!..ஓகே டார்லிங் ? " என்று நெற்றியில் முத்தமிட்டு உள்ளே சென்று விட்டான் .கயல்விழி குழப்பத்துடன் பெருமூச்சு விட்டாள்.
சுந்தர் குளித்து சாப்பிட்டு ஆபீஸ் போய் விட்டான் . அவளும் அத்தையும் சாப்பிட்டு விட்டு சமயல் அறையை சுத்தம் செய்து விட்டு படுக்கை அறைக்கு வந்தாள் .
அவளுக்கு என்ன நேர்ந்தது ? எல்லாம் நன்றாகத்தானே நடந்தது ? அருமையான மாப்பிள்ளையை பிடித்து அப்பா , அம்மா ஆடம்பரமாகவே கல்யாணம் செய்து வைத்தனர் . கயல்விழியின் குணமும் அழகும் பிடித்து போய் வசந்தாவும் சுந்தரும் அவளை தங்க தட்டில் வைத்து தாங்குகின்றனர்.
வசந்தா ஒரு தாய் போல நடந்து கொள்கிறாள் . சுந்தரோ கேட்கவே தேவை இல்லை . காதலும் அன்புமாக இனிமையாகவே நாட்கள் செல்கின்றன ...ஒரு குறையும் இல்லை அவளுக்கு ..ஆனால்..? இப்பொது ஏன் இந்த கனவு ?
எப்போதோ நடந்து முடிந்த ஒரு நிகழ்வு !அது ஒரு கல்லூரி காலம் !இளமையும் குதூகலமும் நிரம்பி வழிய கவலை அற்று திரிந்த காலம் . அன்பான அம்மா ,அப்பா , தம்பி , கல்லூரி தோழிகள் என்று பட்டாம்பூச்சியை பறந்து கொண்டு இருந்தாள் .
அன்று தான் அந்த சம்பவம் நடந்தது !வழக்கம் போல் ஆற்றுக்கு சென்றவேளை அவனை சந்தித்தாள்...இல்லை இல்லை ! அவன்தான் அவளை சந்தித்தான் .ஏதோதோ பேசி கொண்டு ...முடிவில் அவள் மோதிரத்தையும் உருவி கொண்டு போய் விட்டான் .அவளுக்கு அப்போது ஒன்றுமே தோன்ற வில்லை! அவனை அவள் தெருவில் இரண்டொரு முறை பார்த்து இருக்கிறாள் ..அவ்ளோவுதான் ..யாரோ ஒருவன் ஏதோதோ பேசி மோதிரத்தை திருடி சென்று விட்டான் என்று எப்படி சொல்வது வீட்டில்? ஆற்றங்கரையில் காணாமல் போய் விட்டதாக கூறி தப்பித்தாள்.அதோடு அவனை மறந்தும் விட்டாள் .
அது நடந்து ஒரு 3 வருடம் இருக்குமா ? இப்பொது ஏன் அந்த கனவு போல நடந்தது வந்தது ? அவனை மறந்து விட்டாள் என்றே நினைத்து இருந்தாள்.
அழகான கணவனுடன் குடும்பம் நடத்தும் வேளையில் ஏன் இந்த வேண்டாத கனவு ? யோசித்து யோசித்து தலை வலித்தது அவளுக்கு ...அப்டியே தூங்கியும் விட்டாள் . வசந்தா வந்து எட்டி பார்த்து மதிய சாப்பாடு சாப்பிட கூப்பிட போதும் ..வேண்டாம் அத்தை நான் அப்புறம் எழுந்து சாப்பிடுகிறேன் என்று கூறி விட்டாள் . அடித்து போட்டது போல அப்டி ஒரு தூக்கம் ..
மாலையில் சுந்தர் வந்ததும் வசந்தா கயல் சாப்பிடவே இல்லை என்று கூறி விட்டாள். அதை கேட்டு சுந்தர் படுக்கை அறையில் நுழைந்தான் .கயல் கண்ணாடி முன் நின்று பொட்டு வைத்து கொண்டு இருந்தாள் .அவன் பெட்டியை அலமாரியில் வைத்து விட்டு அவளிடம் வந்தான்
கயல் புன்னகைத்து " வந்துடீங்களா ? காபி எடுத்து வரவா என்று கேட்டாள்.
அவன் மெலிதாக சிறிது அவள் நெற்றியை சரி செய்தான்.." முதலே பொட்டு சரியா வை ! " என்றான் . கயல் கண்ணாடியை பார்த்தாள். பொட்டு தள்ளி வைத்து விட்டாளோ? சுந்தர் கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தையே பார்த்து கொண்டு நின்றான் .அவன் பார்வையில் தெரிந்த மாற்றம் அவளை திடுக்கிட செய்தது !
-
Agni kathai nalla iruku. vaalthukal
-
WOOWWO SOOO NICE KEEP WRITE ;D
-
மிக்க நன்றி ஜோ சிஸ்! ஜெகா. நன்றி!
-
சுந்தர் அவள் கண்களை பார்த்துக்கொண்டே ,"உனக்கு என்ன ஆச்சு கயல் மா? உன் மனச எதுவோ பாதிச்சு இருக்கு என்னனு சொல்லுமா " என ஆழமாக கேட்டான்.கயல் விழிக்கு மறுபடியும் மூச்சு இழுத்து பிடித்தாள்.மலங்க மலங்க விழித்து," என்னங்க , நான்உங்களுக்கு துரோகம் பண்ணிடனோ னு நெனைக்கிறேன் ..அது ரொம்ப guiltya இருக்கு " என்று ஒருவாறு போட்டு உடைத்தாள் .அவள் விழிகள் அதற்குள் மழை பொழிய ஆரம்பித்து விட்டன .
சுந்தர் அவளை தான் பக்கம் திருப்பி ," அவள் முகத்தை கைகளில் ஏந்தி " நீயா ? என்னக்கா ? துரோகமா ? நெவெர் கயல் ...நீ நினைச்சாலும் உண்ணல் முடியாது ...முதல்ல என்ன நடந்துச்சுனு சொல்லு டியர் " என்று கட்டிலில் அமர வைத்தான் .
குவளையில் இருந்து நீர் எடுத்து குடிக்க கொடுத்தான்.." நீ first குடி ...நிதானமா சொல்லு என்ன நடந்துச்சுனு " என்று அவள் நீர் குடிக்க காத்து இருந்தான் .கயல் நீரையே கண்டிராதவள் போல மடக் மடக் என்று வேகமாக குடித்தாள்.அவளுக்கு அப்போது அது தேவை பட்டது போல.சுந்தர் " மெதுவா மா ..போதுமா ? என்று கேட்டான் .அவள் போதும் என தலை ஆட்டினாள் .
அவன் கைகளை பிடித்து கொண்டு " என்னை தப்பா நெனைக்கமாட்டேங்கதான ? " என்று பயத்துடன் கேட்டாள். அவன் அவள் தலையை கோதி," இல்லமா...எனக்கு என் கயல் பத்தி தெரியும் ..நீ சொல்லு " என்று உற்சாக படுத்தினான் .
கயல் சற்று தைரியம் வந்து அன்று காலை தோன்றிய கனவையும் அது தொடர்பாய் நிகழ்ந்த பிளாஷ் back சொல்லி விட்டு தொடர்ந்தாள்.," ஏங்க...சத்தியமா அவனை அன்னிக்கு பார்த்ததுதான் ..மறந்து கூட விட்டேன் ..பட் இப்போ எதுக்கு அவன் கனவிலே வந்தான் ? எதுக்கு அது நியாபகம் வந்துச்சு ? னு கூட புரியல ...எனக்கு சங்கடமா இருக்குங்க " என்று அவன் முகத்தை பார்த்தாள் பரிதாபமாக .
சுந்தர் மென்மையாக சிரித்தான் .." இவ்ளோதானா டியர் ..நானே என்னமோ எதோ னு நெனைச்சுட்டேன் '...என்று அவள் கைகளை வருடி விட்டு ரிலாக்ஸ் கயல்மா " என்றான் .
கயல் குழப்பத்துடன் அவனை நோக்கினாள். சுந்தர் கையை அமர்த்தி ," வெயிட் வெயிட் நான் clear பண்றேன் ...அப்போ உனக்கு என்ன வயசு கயல் என்று கேட்டான் .
" ஒரு 18 வயது இருக்கும் " என்றாள் கயல் .
அதுவரை ஒரு வயசு வாலிபனுடன் நீ பேசினதே இல்லதான? என வினவினான்.
அவள் தலை ஆட்டினாள் ." .பேசி இருக்கேன் ..பட் அவ்ளோ closea யார்கிட்டயும் நின்னு பார்த்ததும் இல்ல பேசினது இல்லா.." என்றாள் தயக்கத்துடன் .
" சுந்தர் பட பட வென கைகள் தட்டினான் " அதேதா கயல் மா ...அதுவரை உன் மனசில குழந்தை தனம்தந் இருந்து இருக்கு ..அவன்தான் உன் மனசில முதல காதல் உணர்வை தூண்டி இருக்கான்.." என்று கூறவும் ..அவளுக்கு பக் என்று ஆனது .. அய்யோயோ ...அப்படி எல்லாம் இல்லைங்க ..என்று எதோ கூற வந்தாள்.. சுந்தர் ..கல கல வென சிரித்தவாறே ...கூல் கயல்மா ..இதில தப்பு ஒன்னும் இல்ல...அப்போ ஏதும் தோணல உனக்கு...ofcourse இப்போ கல்யாணம் ஆகி என்கூட இருக்கப்போதான் அவன் நம்மை காதலிச்சானோ னு தோணி இருக்கு ...அதாவது எது ஒரு feel ..நாம நேசிக்க பட்டு இருக்கோம்ங்கிற ஒரு பெருமிதம் ...இதுல உன் தப்பு எதுமே இல்லையே கயல் ...இட் இஸ் Nature ! " என்று தோள் குலுக்கினான் ..
கயல் அவனை நன்றியுடன் பார்த்தாள்..இப்படி ஒரு .கணவனை பெற அவள் என ஒரு பாக்கியம் செய்து இருக்க வேண்டுமாம்..கல்யாணம் ஆகியும் அடுத்தவனை நெனைக்கிறாயா ? வீட்டை விட்டு வெளிய போ என்று கத்தாமல் அவளை அவளுக்கே புரிய வாய்த்த சுந்தரை பெருமையாக நினைத்தாள் ..கயல் கண்கள் ஆனந்த கண்ணீரை பொழிய அவனின் மார்பில் சாய்ந்தாள் .
(முற்றும் )
-
:P apo confirm ha mothiratha ataiya potutan pola :P pavam ithu theriyama nama sundar vera aruthal solurar athu first love nu :-X
-
Nice ending to the story. so understating husband
-
Beautiful story. NIce ending. I like it. Keep it up
-
Visithirama irukuthu.. Story nalla irukuthu agni sis.
-
அழகான காதல் கதை அக்னி சிஸ். ஆனா இந்த காலத்துலையும் சரி அந்த காலத்துலையும் சரி எந்த காலத்துலையும் இப்படி ஒரு பையனா இருக்கானா அப்படினு தெரியலே சிஸ். அப்படி ஒரு பையன் இருந்த எனக்கு பார்த்து சொல்லுங்க சிஸ். Nice story. நிறைய எபிசோட்ஸ் வர்ர மாதிரி கதை expect பண்றேன் சிஸ். Love u sis
-
semma darling enakum saayanum pola feelaguthu enna sayathan nenchilla :(
sema kathai ... ellam antha paruvathula vara kolaaruthaan :D
-
உனக்கு...ofcourse இப்போ கல்யாணம் ஆகி என்கூட இருக்கப்போதான் அவன் நம்மை காதலிச்சானோ னு தோணி இருக்கு ...அதாவது எது ஒரு feel ..நாம நேசிக்க பட்டு இருக்கோம்ங்கிற ஒரு பெருமிதம் ...இதுல உன் தப்பு எதுமே இல்லையே கயல் ...இட் இஸ் Nature ! " என்று தோள் குலுக்கினான் ..// have a relationship that is mature enough to sit down and be like " look this is our problem and this is how we're gonna fix it. Beautiful ending Agni sis.