நீங்கள் எந்தக் காதலை கேட்கிறீங்க? இந்த காலகட்டத்தில் காதலில் பலவகை உண்டு. பொழுதுபோக்குக்காக காதலிப்பது, பெருமைக்காக காதலிப்பது, POCKET MONYக்காக காதலிப்பது இப்படி நிறைய காதல்கள் இருக்கிறது. இவை அனைத்தும் இரண்டு தரப்பினர்களாளும் இலகுவில் மறக்கப்படுகிறது. இதில் மறப்பது யார் என்பது காலநிலை போல அடிக்கடி கூடிக் குறையும்.
உண்மையான காதல் என்பது சுவாசம் போல. நாம் உயிர் உள்ளவரை சுவாசிப்பது போல உண்மையான காதலும் சாகும் வரை மனதில் இருக்கும்.காதலர்கள் மாறலாம், காட்சிகளும் மாறலாம். நம் வாழ்க்கை கூட மாறலாம். ஆனால் ஒருவர் மேல் கொண்ட உண்மையான காதல் என்றும் மாறாது.
இதில் ஆண், பெண் என்ற பேதமில்லை.
சந்தர்ப்பம் சூழ்நிலைகள் பல உண்மையான காதலர்களை பிரித்திருக்கிறது. ஆனால் அந்த உண்மையான காதல் அவர்கள் இதயத்தில் பசுமரத்தாணி போல என்றும் பதிந்திருக்கும். அது காலத்தால் அழியாது. எந்த சாவாலும் அந்தக் காதலை மனதில் இருந்து பிரிக்க முடியாது.
இது ஆண் பெண் இருவருக்கும் சமமானது. நான் முன்பதாக சொன்ன மற்ற விதமான காதல்களை இலகுவில் மறப்பது ஆண்களா இல்லை பெண்களா என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லலாம்.
பொழுதுபோக்குக்காக காதலிப்பது அனேகமாக ஆண்களாக தான் இருக்கும். இலகுவில் மறப்பதும் அவர்கள் தான்.
பெருமைக்காக காதலிப்பதும் ஆண்கள் தான். தனக்கும் கேள்பிரண்ட்ஸ் இருக்காங்க என்று பெருமையாக சொல்வதை விரும்புபவர்கள் ஆண்கள் தான்.
POCKET MONEYக்காக காதலிப்பது பெண்கள் தான். SHOPPING, RESTORENT போனா பசங்க பர்ஸ்ச காலி பண்ணுவது பெண்கள் தான். கனமான பர்ஸ் கிடைச்சா காதலனும் காலி.
சண்டைக்கு வராதிங்க. இது அனைத்தும் உண்மையான காதல் இல்லை.
உண்மையாக காதல் காலத்தால் அழியாது. கல்வெட்டாக ஆண்கள், பெண்கள் இருவர் மனதிலும் நிலைத்து இருக்கும்.