Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 277  (Read 2115 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 277

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

« Last Edit: September 25, 2021, 11:48:41 PM by Forum »

Offline Mr Perfect

  • Jr. Member
  • *
  • Posts: 58
  • Total likes: 296
  • Karma: +0/-0
  • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰

💜💜பிரசவ அறைக்கு வெளியே உன் முதல் அழுகை கேட்ட நொடி, அப்பாவாய் நான் பிறந்தேன் கண்மணியே!

💜💜 அக்கனமே என் இளவரசிக்கு அழுகை அறியா ஓர் உலகை கொடுக்க தயாரானேன் ஒரு தகப்பனாய்!

💜💜 இந்த பூமியில் பூத்த புன்னகை தேவதை இவள்!

💜💜அவள் தரும் முத்தத்தில் என் இன்னலை மறக்கச் செய்பவள்!

💜💜சிரிப்பின் ஓசையால் என் சினத்தை சிதறச் செய்பவள்!

💜💜அவளின் கை விரல் தீண்டலால் என் காயங்களை ஆறச் செய்பவள்!

💜💜அவளின் மழலை மொழியில் உலகையே மறக்கச் செய்பவள்!

💜💜அவள் விடும் கண்ணீர் துளியில் என் மனதை கலங்கச் செய்பவள்!

💜💜அவள் ஊட்டிவிடும் ஒரு வாய் சோற்றில் தாயின் அன்பை தருபவள்!

💜💜அவள் கொலுசின் ஓசையால் பல கீதங்களை இசைப்பவள்!

💜💜என் விரல் பிடித்து அழகாய் நடை பழகுபவள்!

💜💜என் உயிரிலே கலந்தவள்!  💜💜என் உலகமென மாறியவள்!

💜💜அப்பா என்ற ஒரு வார்த்தையால் என்னை கட்டிப்போட்டவள்!

💜💜 என்ன தவம் செய்தேன் நீ என் மகளாய் பிறப்பதற்கு!

💜💜உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை

💜💜எனினும் ஆயுள் உள்ளவரை என் நெஞ்சில் சுமப்பேன் கண்மணியே!💜💜
« Last Edit: September 12, 2021, 02:11:28 PM by Mr Perfect »

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

தனிமையை பரிசளித்த என்னவள் !
உன்னை பரிசாக தந்திருக்கிறாள்!!
என்னவளின் அன்பு பரிசு நீ!!!
விலை மதிக்க முடியா பொக்கிஷம் நீ!!!!
உன் சிரிப்பை கண்டு நான்
சொக்கிதான் போனேன்!!!!!

கலங்காதே என் ஆசை தேவதையே!
என்னவளின் பிரிவு உன்னை,
எப்போதும் நெருங்க விட மாட்டேன்!!
எந்தன் அரவணைப்பில் நீ!!!
உந்தன் அரவணைப்பில் நான்!!!!

பிரிவு கண்டு நான் கலங்க மாட்டேன்!
என்னவளின் பிரிவை போக்கும்,
அருமருந்து நீதானே செல்லமே!!
பெறாத இன்பம் தனை நான் பெற்றேன்!!!
உந்தன் மடியில் படுத்து உறங்க,
ஆசை கொண்டேன் என் கண்ணே!!!!

எந்தன் இறுதி வரை உன்னை
இமையாய் காத்து நிற்பேன்!
எந்தன் நிழலே நீ தானே அன்பே!!
என்னவளின் பாதி நான் !!!
என்னில் பாதி நீ !!!!
உனக்கு நான் எனக்கு நீ என,
வாழ்வோம் உலகம் மறந்து,
என்னுடன் நடை போட வா!!!!!



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 127
  • Total likes: 761
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அழாதிரு மகனே அழாதிரு ....
தாயைத் தொலைப்பதைக் காட்டிலும்
கொடுமையானது தாய்மண்ணைத் தொலைப்பது...
இரண்டையும் தொலைத்து விட்ட
உன் துயரத்தைவிட
என் வலி ஒன்றும் பெரிதல்லடா.....

துளியாய் துவங்கிய இத்துயரம்
இன்று பெருமழையாய்
கடக்க இயலாமல் கண்முன்னே
நம் வாழ்வனைத்தையும் சுருட்டிக்
கொண்டு போனதடா.....

நட்பு வேஷம் பூண்டு
துரோகமிழைக்கும் வஞ்சகர் கூட்டம்
பல உண்டு..அதில் உன்
அப்பனின் ஆணிவேர் சாய்ந்த
கதைக்கும் இடமுண்டு என்பதைப்
புரிந்து கொள்ளடா.....

இனிமேல் நான் என்ன
செய்யப் போகிறேன் என்பதைவிட
நீ என்னவாகப் போகிறாய் என்பதிலே
என் வாழ்வனைத்தும் சுழலுதடா.......

நம்மை விழச்செய்தவர்களை
வீழச் செய்யாமல் விடக்கூடாது
என்பதில் வேட்கையாய் இரு...
கவனமாய் இரு...
நம் கண்ணீர் காற்றில் கரைந்துவிடும்
கற்பூரம் அல்ல...வேரினிலே
வளர்ந்துவிட்ட நெருப்பூரம் அது...

வேரின் கதை மறந்த கிளைகள்
செழிப்பதில்லை.. உன் தகப்பனின்
கதை அறிந்து உன்னை செதுக்கிக்கொள்..
வளர்த்துக்கொள்.. எழுச்சி விதைகளை
உன்னுள் தூவிக்கொள்... பரப்பிச் செல்...

ஒரு நாள் நானும் உன்னை
விட்டு நீங்கலாம்...அப்படி
நீங்கினாலும் சோர்ந்துவிடாதே...
துவண்டுவிடாதே... இவ்வுலகில் எங்கோ
இருந்து கொண்டு உன்னைக்
கண்காணித்துக் கொண்டுதான்
இருப்பேன் பறவையாய் செடியாய்
மரமாய் ஏதோ ஒன்றாய்......!!

Offline Dear COMRADE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Male
  • என் இனிய தனிமையே✍️
என்னவள் கருவில் பூத்து
என்னை அப்பா என்றழைக்க
தேவதை கூட்டத்தின் இளவரசியாய்
என் தோள் சாய வந்தவளோ...

என் மார்பு கம்பளம் விரிக்குமடி - உன்
பிஞ்சுக்கால்கள் மெல்ல நடக்கையிலே...
என் காதில் தேனிசை பாயுமடி- உன்
மழழை பேச்சை கேக்கையிலே...
நானும் குழந்தை ஆவேனடி - உன்
குறும்புச் சேட்டையை ரசிக்கையிலே...
நானும் உன் மகன் தானடி - நீ
அதட்டி அதிகாரம் செய்கையிலே...
அன்பு மகளே நீயும் ஆணையிட்டால்
அப்பன் நானும் உந்தன் சேவகனே...
உன்னை அள்ளிக் கொஞ்சுகையில்
என்னை இறுக பற்றிக்கொண்டு...
உமிழ்நீர் கொண்டு சித்திரம் வரைய
எந்தன் முகம்தான் உந்தன் காகிதமோ...
 
சிங்கம் வாழும் காட்டில்
சிறு குள்ளநரிகளும் உண்டு...
சிரித்துப் பேசுவர் எம் முன்னே- வாழ்வை
சீரழிக்க சதி தீட்டுவர் அதன் பின்னே...
கள் என்று அனைவரையும் கருதாதே
செம்பால்  என்றும் செவி சாய்க்காதே...
காலம் உனை அழைக்கும் - அன்று
கயவர் யாரென்று அது உரைக்கும்...

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்,
அதை கையாளுமே- இங்கு சில
பசும்தோல் போர்த்திய புலிகள்...
அன்னப்பறவை ஆகிடு - அதில்
அன்பை இரண்டரப் பிரித்தெடு...

இன்னார் செய்தாரை ஒருத்தல்- அவர் நாண
நன்னயம் செய்து விடல் -  இதுவே தந்தை
நான் கூறும் வாழ்வின் சாராம்சம்...
காலப்போக்கினில் இதை கற்றிடுவாய்- அதை
கடந்து சென்று வெற்றிக்கொடி நட்டிடுவாய்...

அந்திச்சூரியன் மறைந்தாலும்
அந்த பௌர்ணமியாய் மலர்வேன்...
அதை காரிருள் சூழ்ந்தாலும்
அள்ளித் தெளித்திடுவேன் அந்த தாரகைகளை
அனையா வெளிச்சம் உன்வாழ்வில் வீசிட...

அதுவரை தற்சமயம்,
அனைத்தும் மறந்து என்தோளில் தூங்கடி
என் இனியவள் தந்த பொக்கிஷமே- உனை
அள்ளி ஏந்தி ஓர் இடம் செல்கின்றேன்
அங்கு நானும் நீயும் மட்டும் வாழ...
தூங்கடி...தூங்கடி...தூங்கடி எந்தன் செல்வமே......

                                                                  Dear COMRADE (Hunter) 🙂
« Last Edit: September 14, 2021, 02:16:15 PM by Dear COMRADE »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 642
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


அன்று,
எண்ணில் அடங்கா விஷ ஜந்துக்கள் உலவும் அடர்ந்த பசும் காடு...
எதிரில் தெரியும் உருவம் எதுவென உணர முடியாது...
என் கண்களும் பார்வை இழந்து தவித்தது தடுமாற..
என்னை சுற்றி இருந்த கன்னங்கரிய காரிருள் நடுவே..
என் கடமையை நானும்.. செவ்வனே செய்ய விழைந்தேன்..
 
அச்சமயம்,
எந்த சூழ் நிலையும் என் மனோ நிலையை  பாதிக்காது
எல்லை பாதுகாப்பில்..  நானும் கவனமாக இருந்த போது..
எங்கிருந்தோ இடியென சீறி பாய்ந்து..  என் காதுகளை கிழித்தது..
எந்திர துப்பாகிகளை மாறி மாறி சுடும் சத்தம்.. நானும் விருட்டென 
என் செவிகள்.. ஒலி உணர்ந்த..  .திக்கு நோக்கி எழுத்து ஓடினேன்..

அங்கே,
எதிரி நாட்டு படைகளின் முகாமில். ஏதோ ஓர் அசம்பாவிதம்..
என் எண்ணத்தில் 1000 கேள்விகள் எழ.. அங்கே பார்த்தேன்...
என்னால் என்னவென்று யோசித்து..  முடிவுக்கு வருமுன்னே..
எல்லோரும் எங்கெங்கோ சிதறி தலைதெறிக்க ஓடி மறைந்தனர்.
எத்திக்கிலும் ஓசைகள் ஒடுங்கி நிசப்தம் நிலவ.. திரும்பினேன்..

அப்போது,
என் சிறு செவிகளை.. மெல்லியதாக தீண்டியது ஓர் ஓசை..
என்னவாக இருக்கும் என இன்னும் சற்றே நெருங்கி சென்றேன்..
என் சப்த நாடிகளும் ஒரு கணம் அதிர்ந்து ஆட நின்றது..
என் கண்முன்னே நான் கண்ட.. நம்பமுடியாத காட்சி..
எண்ணி பன்னிரண்டு  நாட்களே ஆனா பச்சிளம் குழந்தை...

அன்னிசையாக,
என் இரு கால்களும்.. என் மனமும் அச்சிசு நோக்கியே..
என்னையறியாமலே..  ஓர் சிறு நடுக்கத்துடன் நடந்து செல்ல..
எதிராளி முகாமின் வெளி பரப்பில்.. சற்றே தொலைவில்
என்ன நடக்கிறது என்று.. கொஞ்சமும் புரிய முடியாத நிலையில்..
என்னை நோக்கி.. தன் சின்ன ரோஸ் இதழ்கள் நெளிய அழுதது...

அந்நொடியில்,
என் கண்களில் நீர் வழிய.. நெஞ்சினில் பாசம் பொங்கி எழ.. 
என் கைகளில் அள்ளி எடுத்து.. என் தோளில் சாய்த்தேன்...
என் மனதில்..  இது ஓர் எதிரி சிசு என்ற எண்ணம் எழவில்லை..
என் தோள்களே..  தன்  ஆனந்த அமைதியான உலகமே..
என்ற எண்ணத்தோடு..  தன் விழிகளை முடி துயிலும் குழத்தையை..

அமைதியாக.. அணைத்தவாறு நடந்தேன்.. என் குடில் நோக்கியே...



Offline MoGiNi

சிலுவைகள்
சுமந்த பூக்கள்
எப்பொழுதும் அழகானவை

சில வலிகளின் நிவாரணியாக
ஓர் கோடைகாலத்தின் 
மழைத்துளியாக
துன்ப வெள்ளத்தின்
துடுப்பென
சில முற்றுப் புள்ளியின்
தொடர் புள்ளிகளாக
என்றும் அவை ..

கடந்த காலத்தின்
கருமையான
பக்கங்களில் பூத்த
அழகான கையெழுத்துப் பூ நீ
உன் வாய் வழியில்
வந்து விழும்
வார்த்தைகளுக்காய்
தவம் கிடைக்கும்
தாய் உள்ளம் கொண்டவன் தான் ...

உன்னை உதறிய
கைகளுக்கு தெரியவில்லை
உந்தன் ஊயர்வுகள்
பதறியழுத உன் அழுகைக்கும்
படியவில்லை அதன்
மனம் - எனில்
அது பிணம் ...
உல்லாசத்தில் உருவான
குழந்தை குப்பை என
நினைத்தாளோ ?
இல்லை
உன்னை வளர்க்க
கொடுத்து வைக்காது
கொலைவாளில்
பலி ஆனாளோ ...

எதுவாய் இருப்பினும்
என்னடா ..
இரும்பு சுமந்த என் கரங்கள்
இணையை இழந்த
என் இருதயம்
ஏந்தி சுமக்கும் உன்னை
வாழ்நாள் முழுமைக்கும் ..

உன்னை தவறவிடவில்லை
எனக்காய்
தாரை வார்த்திருக்கிறாள்
உன்  அன்னை ...
வா எதிர்காலம்
எனக்கும் உனக்குமாய் ...
« Last Edit: September 12, 2021, 11:45:40 PM by MoGiNi »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !


போர்களத்தில் பூத்த பூவே!
நீ இந்த நிலத்தில்
புரியவேண்டிய போர்களைப்பற்றி
கூறுகிறேன்! கேளாய்..!

தாயை‌ விட்டு நீ இழந்து பிரிந்து  தவித்து இருந்தாலும்...
தன்மானத்தை இழக்க விரும்பாத
உன் தாய்நாட்டு வெற்றிக்காக  போராடு!

மங்கையரின் வாழ்வை சூறையாடும் மாபாதகர்களை
சூல் கொண்டு  வெறியோடு  வேட்டையாடி போராடு!

வெஞ்சமரில் உதித்த பூரண
வெள்ளி நிலவாய் ஒளிர்பவனே!
வறுமையின் கறுமைநிழல்
உன்மீது படராத்திருக்க போராடு!

சருகாய் உதிர்ந்த  காட்டில்
சாம்பலாகாமல்  தளிர்த்தவனே...
சாதி வேரோடிய‌ இப்பூமியில்
சமதர்மத்தை நிலைநிறுத்த
சளைக்காமல் போராடு!

பஞ்சம் நிறை வஞ்ச களத்தில்  வண்ணமலராய் மலர்ந்தவனே!
மிஞ்சிகிடக்கும் லஞ்சங்களை
ஒழிக்க அஞ்சாமல் போராடு!

கல்லறைபூமியில் பிறந்தவனே!
மேலுலகத்திற்கு கொண்டு
செல்லமுடியா சில்லறைக்காக
அல்லாடும் பேராசை‌மனிதர்களை
திருத்த போராடு!

நிச்சயமில்லா‌ நிலத்தில்
நீடுழிவாழ பிறந்தவனே!
நீதி, நேர்மை, நியாயங்கள்
காத்து அமைதிபூமியாக்க
கம்பீரமாக போராடு!



Offline SweeTie

பெற்றவள்  உன்னை   விட்டெறிய 
குற்றமென்ன   செய்தாயோ  குலவிளக்கே
என் வீட்டின்   ஒளி  விளக்கே   
என் குறை தீர்க்க  வந்தவனே   

 பொலிவிழந்த  இல்லத்தை    அலங்கரிக்க வந்தவனே
அழகான மழலையால்  மகிழ்விக்க வந்தவனே
 உன்  இதமான சிரிப்பொலிகள்  கேட்டு
இல்லமே  இன்பத்தில்   மிதக்குதடா

இல்லையொரு  பிள்ளையென்று    ஏங்கிநின்ற போது 
எங்கிருந்தோ வந்தாய்   என் மகனே 
இனி இல்லை   எனக்கு    ஏதும்   குறைகள்  என
என் முகம்  மலர வைத்தாய்    மானே   

தந்தை  என்  வளர்ப்பில்    நீ தரணியும் ஆள்வாய்
பொல்லா  பிணிகள்   போக்கவும்    கற்பாய்
வித்தைகள்    பலவும் கற்றிட செய்வேன்
உன்  வளர்ச்சியில்     உலகமே  கொள்ளும்  பொறாமை

வாழப்  பிறந்தவன் நீயடா   என் செல்வமே 
வாழவைப்பவன்    நான் உன்   தாயுமானவனுமாவேன்
குறைகள்    இனி   உனக்கில்லை   மகனே
குன்றின்மேல் ஒரு நச்சத்திரமடா   நீ !

பெற்றவர்  செய்யும்   தவறுக்கு   
பலியாகும்    ஆட்டுக்குட்டிகள்     இவர்கள்   
விதியை  வகுக்கும்   இறைவன்   எனோ 
பெற்றவர் மதியை  மறக்கவும்  வைத்தான்..   
« Last Edit: September 15, 2021, 02:04:28 AM by SweeTie »