ஊர கூட்டி வச்சு
ஒரு இடத்தில் பந்தல் இட்டு,
நாளு கிழமையின்னு
நாளு பேரு சொல்லக் கேட்டு ,
ஜோடி பொருத்தமுன்னு
சொந்த பந்தம் பாத்து சொல்ல,
ஆணும் பொண்ணும் இங்கே
அகத்திலே கலக்கின்றார்..
எத்தனை சாதி உண்டு,
எத்தனையோ சாமி உண்டு,
அத்தனை மதங்களிலும்,
திருமணங்கள் நடப்பதுண்டு.
ஒவ்வொரு மதத்திலுமே ,
ஒவ்வொரு முறையில் இங்கே
நடக்கும் திருமணமோ ,
இரு மனங்கள் இணைக்குமுங்க !!
பத்திரிக்கை அச்சடிச்சு ,
பல வீடு கொடுத்துப்புட்டு ,
நிச்சயம் செஞ்சபடி
நடக்கும் ஒரு திருமணத்தில் ,
அச்சு வெல்லம் போல பொண்ணு ,
மாப்பிள்ளையின் மனம் இனிக்க !
பாக்குற மக்கள் மனசும்
சந்தோசத்தால் இனிக்கும் !!
பந்தியில அமர வச்சு ,
பாகுபாடு கலைச்சிப்புட்டு .
பசியாற சோறு தந்து ,
வாழ்த்து கேட்டு வணங்கி நிக்கும் ,
இருமனம் இணைக்கின்ற
திருமணம் தான் நாம் சென்று ,
அவர்தம் வாழ்க்கை இங்கே
இனித்திட தான் வாழ்த்துவோமே!!!
அன்புடன் திருவாளர் பீன்