Author Topic: கிரக தோஷம் இருப்பவர்கள் சிவனுக்கு பூஜை செய்தால் போதுமா?  (Read 2808 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

பொதுவாக தோஷம் உள்ள ஜாதகர்கள் சிவனுக்கு மட்டும் பூஜை செய்தால் போதுமா அல்லது தோஷமடைந்த கிரகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டுமா?


பதில்: பரிகாரங்கள் என்றவுடன் உடனடியாக கோயில்களை மட்டுமே பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ஏராளமான பரிகாரங்களை மக்களால் செய்ய முடியும்.

உதாரணமாக, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம். மேலும் செவ்வாய் பூமிக்காரகன் என்பதால் கோயில் சொத்துக்களை வைத்திருந்தால் அதனை உரிய இடத்தில் சேர்த்துவிடலாம். இதேபோல் அடுத்தவர் இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும் அதனை விட்டுத் தரலாம்.

செவ்வாய் சகோதரத்துவத்திற்கும் உரிய கிரகம் என்பதால் சகோதரர்கள், சகோதரிகள் முன்னேற்றத்திற்கு உதவுவதுடன், அவர்களுடன் நட்புறவைத் தொடர்வது நல்லது. இதுபோன்று செய்வதால் செவ்வாய் மகிழ்ச்சியடைவார். அவரால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தார். அவருக்கு 4 பெண்கள் உள்ளனர். அவரது ஜாதகத்தில் செவ்வாய் மோசமாக இருந்தது. அவரின் 4 பெண்களின் ஜாதகத்திலும் செவ்வாய், சூரியனும் ஒன்றாக இருந்தது. அதுமட்டுமின்றி அவற்றுடன் ராகு (அல்லது) கேது (அல்லது) சனியும் சேர்க்கை பெற்றிருந்தனர்.

அவரின் 4 பெண்களும் நன்றாகப் படித்து, நல்ல வேலையில் உள்ளனர். அழகிலும் குறைவில்லை. ஆனால் 25 வயதைக் கடந்த பின்னரும் யாருக்கும் திருமணம் நடைபெறவில்லை. வரும் வரன்கள் எல்லாம் தள்ளிப் போனது.

ஜாதகத்தை தீவிரமாக ஆராய்ந்த பிறகு அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, “கோயில் சொத்து ஏதாவது உங்களின் வசம் இருக்கிறதா?” என்பதுதான். அதற்கு அவர் அளித்த பதில், “எங்கள் பரம்பரைக்கே கோயில் சொத்தை அபகரிக்கும் பழக்கம் இல்லை. வேண்டுமானால் எனது கிராமத்தில் வந்து கேட்டுப் பாருங்கள். 4 கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியுள்ளேன்” என்று கோபமாக பதிலளித்தார்.

“மன்னித்து விடுங்கள், உங்களுக்கு மேற்கொண்டு பலன் சொல்ல நான் தயாராக இல்லை. தயவு செய்து நீங்கள் கிளம்பலாம் என்று” நானும் பதிலளித்தேன். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் ஏன் என்று கேட்டார்.

அதற்கு “உங்கள் ஜாதகம் கூறியதைத்தான் நான் உங்களிடம் தெரிவித்தேன். அதை நீங்கள் மறுக்கிறீர்கள். கோயில் சொத்தை அபகரிக்காதவர்களுக்கு இதுபோன்ற ஜாதக அமைப்பில் குழந்தைகள் பிறக்காது. எனவே, ஒன்று நீங்கள் பொய் சொல்ல வேண்டும் அல்லது நான் கற்ற ஜோதிடம் தவறாக இருக்க வேண்டும்” என்றேன். இதைக் கேட்ட அவர் உடனடியாக சென்று விட்டார்.

ஒரு 6 மாதத்திற்குப் பின்னர் மீண்டும் என்னைச் சந்திக்க வந்த அந்த விவசாயி மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். விசாரித்ததில், மகள்களுக்கு வரும் வரன் எல்லாம் வாசல் வரை வந்துவிட்டு சென்று விடுகின்றனர் என்றார்.