FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: ChuMMa on April 04, 2017, 08:40:00 PM

Title: தக்காளி சட்னி
Post by: ChuMMa on April 04, 2017, 08:40:00 PM
கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...

மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..?

வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல,
இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...

மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்... (ஐந்து நிடங்கள் கழித்து..)

கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...

மனைவி - ஐயா, ஜாலி...

கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...

மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா..

கணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா போடி..  😋😋😋
Title: Re: தக்காளி சட்னி
Post by: VipurThi on April 07, 2017, 10:50:28 AM
Chumma na;D anna ipdi kathaigala neraya post panunga na:) pls na;)
Title: Re: தக்காளி சட்னி
Post by: SarithaN on April 14, 2017, 05:33:27 PM
சகோ.....

இப்படித்தான் நிறைய நடக்குது.....

நமக்கு வந்தா அதை இரத்தம் என்று
ஒப்புக்கொள்வதாக இல்லை.....  :) :) :)

கணவன் மனைவியர் தங்களை
பெற்றவர்களை நேசிப்பது போலவே
மாமா மாமியை நேசிக்கும்.....
உள்ளம் கொள்ளவேண்டும்.....