ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 142
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/142.png)
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்ப தமிழ்
எங்கள் உயிருக்கு நேர் !!
பிழைப்பு தேட வந்த இடத்திலே
இரு மனங்கள் இணையவே
தலைமுறை தலைமுறையாய் நாங்கள்
இன்று வரை வேற்றுவாசியின் மண்ணில்
பிற மொழியினை பேசி பிழைக்கின்றோம் ..
இந்த வேற்றுவாசியின் மண்ணிலே
என் தாய்மொழி அழிந்திடாதிருக்க
சிசுக்களுக்கு தமிழிலே பெயர் சூட்டினர்
ஆரம்ப கல்வியினை தமிழிலேயே புகட்டினர்
கலை கலாச்சாரம் அனைத்தையும் போதித்தனர்
இங்கே இந்த மண்ணிலே ..
எனக்கு அடையாளம் தந்தது எம் மொழி
வாழ தூண்டும் வெறியை தந்தது எம் மொழி
துணிந்து போராட கற்று கொடுத்தது எம் மொழி
எல்லாமாகவும் இருப்பது எம் தமிழ்மொழி !!
இருந்தும் என்ன பயன் ??
வேற்று மொழியின் மேல் உள்ள மோகத்தினால்
தமிழ் பாலூட்டிய எம் தமிழ் அன்னையையே
மம்மி என்றழைத்து அவளை பிணமாக்கி
வேடிக்கை பார்க்கிறது இந்த சமுதாயம்..
தமிழ் அவமானம் இல்லை அடையாளம்
என்று நாம் உணரும் காலம் தூரமில்லை
பொறுத்தார் பூமி ஆழ்வார் என்று கூறியே
தமிழனை ஊமையாக்கி அடக்கியாண்டு
வரலாற்றை கொன்று புதைத்திட்டனர் ..
இனியும் தயக்கம் வேண்டாம்
பெற்றெடுத்த அன்னையை நாமே கைவிட்டால்
அவள் வேறு யாரிடம் அடைக்கலம் நாடுவாள் ??
அவள் கரம் பிடித்து முன்னோக்கி செல்வோம்
தமிழோடு முன்னேறுவோம்
பெருமிதம் கொள்வோம் ..
தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா !!
வீழ்வது நீயாகினும் எழுவது தமிழாகட்டும் ..
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு :)
~ மைனா தமிழ் பிரியை ~