ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 149
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/149..png)
மழை... ☔
வானங்கள் சத்தமிட..
மேகங்கள் கறுத்திட..
காற்று வீசிட ...
மரங்கள் அசைந்திட...
இன்பமாய்
சல சல வென்று பொழியும் மழை... 🌧
நீ ஆகாயத்தில் பிறக்கிறாய்
பூமியில் விழுகிறாய் ...
வானவில்லாய் காட்சி அளிக்கிறாய்...
எங்கள் மனதை கொள்ளையிடுகிறாய்...
தொலை தூரத்தில் இருந்தாலும்...
என் இன்பத்தை வெளிப்படுத்தும்
அழகான மழைத்துளியே ..
உன்னை தொட்டு விளையாடி
சின்ன சின்ன குழந்தை
ஆசையில் மகிழ...
அம்மாவின் அன்பை பெற
அரிய வாய்ப்பு தந்த மழையே...
வறண்ட நிலத்திற்கு ஊற்றை
பொலிவை வரமாய் தரும்...🌾
உன்னை கண்டு முதலில்
மகிழும் ஒருவர் உழவர் ...
பல்லாயிரம் நெஞ்சங்களை
ஆனந்தத்தில் ஆழ்த்தும்
ஆனந்த நீர் நீ ...
மண்ணை செழிமை படுத்தும்
வலிமை நீர் நீ ...
தாவரங்களுக்கு உயிர் கொடுக்கும்
அன்னை நீ ...
வறண்ட குளம் குட்டைகளுக்கு
பெயர் சூட்டுகின்ற தந்தை நீ ...
பூமியால் கொடுக்க முடியாத
வானத்தில் தோன்றுகின்ற
அன்பின் பொக்கிஷம் நீ ...🌨
தலையாட்டி புன்னகைக்கிறது ..
எல்லோர் மனதும்
மழையில் நனையவே
மன்றாடி கெஞ்சுகிறது ...
பல மைல் தூரம் கடந்துவரும்
இந்த நீர்த்துளிகள்
இறைவனின் கண்ணீர் துளிகள்
என்று என் தாய் சொல்வாள்...
உன்னால் மட்டுமே உலகத்தை
காக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் ... 🌊
உன்னால் மட்டுமே என் வீட்டில்
பவர் கட் பண்ணவும் முடியும் ... :'(
[/i]