~ !!அத்தனையும் அழகு!! ~
(https://s1.postimg.org/4toz108nn3/nature.jpg)
குழந்தைகளின் சுவர் ஒவியம் போல
தெளிவே இல்லாத வானம் ..
பள்ளிக்குழந்தையின் கிழிந்த காத்தாடிப் போல ,
அங்கும் இங்கும் ஊசலாடும் மேகம் ..
அழுக்கு படிந்த , ஆடை கிழிந்த
இயல்பான பெண்ணின் அழகு போல
இயற்கையின் பார்வையில்
வளர்ந்தும் , தேய்ந்தும் நிலா ..
மலைகளின் இடுக்கில்
வெட்கத்தோடு எட்டிப்பார்க்கும் சூரியன் ..
கரிய யானையின்
குழந்தை மிரட்டலோடு திரியும் கார்மேகம் ..
வயலில் சிதறிய தானியக்
கூட்டமாய் நட்சத்திரங்கள் .
பார்வை அற்றவர்களின் பிடித்த உலகமாய் மாறும்
இரவு இருட்டு சோம்பேறி, மனிதனின் வேர்வை போல
எப்போதாவது வரும் மழை ..
அத்தனையும் அழகு ..!!!
~ !! ரித்திகா !! ~
~ !!அத்தனையும் அழகு!! ~
(https://s1.postimg.org/4toz108nn3/nature.jpg)
மிக அழகாக இயற்கையையும் பெண்ணையும் இணைத்து கவிதை எழுதிய
அத்தனையும் அழகு ..!!!
~ !! ஜோக் GUY ~
ஜெசிமா ...ஜெக தம்பி ...ஜோக் சகோ !!!
நேரமோதிக்கி கவிதை படித்து ...
பாராட்டு தெரிவித்தமைக்கு மிக்க
நன்றி !!!