FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on January 22, 2018, 07:47:38 PM
-
இங்கு வந்த பிறகு
என்னவோ சில நாட்களாக
என் என்ன ஓட்டத்தில்
உன் நினைவே நிரம்பி வழிகிறது ...
கருமேகங்கள் சூழ்ந்த வானமாய் ...
என்னை சுற்றி உன் நினைவுகள் ....
அடிக்கடி உன் நிழல் படத்தில்
பார்வை செல்ல ...
எனக்குள் எதோ புது வித கலக்கம் ...
என்னை ஆட்டிபடைக்க ...
தீயில் இட்ட புழுவாய் துடிக்கிறேன் ...
என்ன செய்தால் என் கலக்கம் தீரும் ...
விளக்கில் விழும் விட்டில் பூச்சியாய்
நானே தேடி சென்று விழுகிறேன் ...