Author Topic: ~ ஒற்றைத் தலைவலி - நிரந்தர தீர்வு !!! ~  (Read 366 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஒற்றைத் தலைவலி - நிரந்தர தீர்வு !!!




எட்டி மரத்தின் கொழுந்து இலைகளை கொண்டுவந்து, பொடியாக நறுக்கி - ஒரு கைபிடியளவு எடுத்து - ஒரு சட்டியில் போட்டு , அத்துடன் வெள்ளைபபூண்டு , மிளகு வகைக்கு ஒருரூபாய் எடை ( 12 Gram ) எடுத்து அம்மியில் வைத்து அரைத்து அதையும் சட்டியில் போட்டு - ஒரு டம்ளர் அளவு நல்லெண்ணெய் விட்டு கலக்கி அடுப்பில் - மிகவும் சிறு தீ யாக வைத்து காசவேண்டும்.

எண்ணையில் உள்ள நீர் தன்மை அகன்று, இலை சிவந்து வரும் பொது இறக்கி வைத்து ஆரவிடவேண்டும். பிறகு வடிகட்டி வைத்து கொண்டு , தினசரி இரண்டு தேக்கரண்டி அளவு எண்ணையை தலை உச்சியில் வைத்து தேய்த்து, அரைமணி நேரம் ஊரியபின் - சியக்காய் தேய்த்து வெந்நீரில் தலைக்கு குளிக்கவேண்டும். தொடர்ந்து ஏழு நாள் தலைக்கு குளிக்கவேண்டும். இப்படி செய்துவந்தால் ஒற்றை தலைவலி குணமாகும். பிறகு வரவே வராது