ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
விளக்கம் : ஒருவருடைய பண்பு நலன்களையும், செயல்முறைகளையும் பலவாராக, பலநேரங்களில் நோக்கி, நன்கு ஆராய்ந்து, அவரைப் பற்றி தெளிந்தபின்னரே நட்பென்று கொள்ளாதானுடை நட்பு, முடிவிலே தாமே இறந்து மடியக்கூடிய துன்பங்களை விளைவித்து, அவற்றால் துயரத்தையும் தந்து, மரணத்தையும் தந்துவிடும். இக்குறளும், கடந்த குறளும் ஆராயாமல் கொண்ட நட்பால் விளையும் கேட்டினைக் குறித்தமையின், வள்ளுவர் நட்பாராய்தலின் இன்றியமையாமையை முதலிலே வலியுறுத்துவது தெளிவு.
........... .............. செயினும் .................
................ யாமை தலை.