ஹாய் ஸ்டேஷ்,
உங்களுடைய நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி.எப்படியும் நம்முடைய நண்பர்களின் சோம்பேறித்தனத்தால் எனக்கு இந்த வார நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பதிவை முழுமை செய்கிறேன்.
இந்த இசை தென்றல் நிகழ்ச்சியில் இந்த வாரம் இசையால் வெற்றி பெற்ற திரைப்படமாய் நான் தேர்வு செய்திருக்கும் திரைப்படம் " நினைவெல்லாம் நித்யா".
இந்த திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன .
இதில் குறிப்பிட்டு சொல்லும் படியான நான்கு பாடல்கள்,,,,,
ஒரே இசையில் அமைந்த இரு வேறு பாடல்களான
கானல் நீர் போல எந்தன் காதல் / ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பனிவிழும் மலர்வனம்
நீதானே என் பொன்வசந்தம்.....என தொடங்கும் பாடல்கள்
இசை ஞானியின் இனிய இசையால் மெருகூட்டப்பட்டு காலங்கள் கடந்தாலும் என்றும் ரசிக்கும் விதமாக அமைந்து இருக்கும். கோர்வையான தமிழ் வார்த்தைகளை கொண்டு வைரமுத்துவின் வைர வரிகளால் அழகாக வர்ணித்து எழுதப்பட்ட பாடல் வரிகள் இளையராஜா அவர்களின் இசையால் நம் மனதை கவரும் விதமாக அமைந்திருக்கும்
இப்படத்தில் இருந்து நான் கேக்கவிருக்கும் பாடல் Legendary Singer S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் இனிய குரலில் ஒலித்த "நீதானே என் பொன்வசந்தம் " என்று தொடங்கும் பாடல்.
ரசனை என்ற பெயரிலே கண்ட கண்ட குத்து குத்து பாடல்களை கேட்டு கேலிகூத்தாக ஆக்காமல், உண்மையான இசை ரசனையை விரும்பும் நம் இணையதள நண்பர்களுக்காக இந்த பாடலை விரும்பி கேட்கிறேன்.