அண்ணனின் கைப்பிடித்து தெருவில் இறங்கி
விளையாடியதும்
அண்ணனின் பாதசுவடுகளை
அடியொற்றி சுற்றியதும்
பட்டமும்,பறவையும் ஒன்றாய்
கண்ணில் பட
கண்கள் கூசிட
அண்ணாந்து பார்த்து வியந்திட
அண்ணா! அண்ணா!
என்றழைத்த குரலில்
திரும்பிய அண்ணனும்
என்னவென கண்களால் வினவ
கேட்ட ஆயிரம் கேள்விகளில் துவண்டு
தலையில் தட்டிட
ஓவென அழுதபடி
அம்மாவின் மடி தஞ்சம் அடைந்ததும்
அதிக எண்ணமிருந்த கோலிகளை கைகளால்
அளவளாவி மகிழ்ந்திட்ட தருணமும் நிழலாடிற்று
மூன்று சக்கர சைக்கிளை எனக்கு
கற்றுதருவதாய் சொன்ன அண்ணனை
ஆவேன பார்த்த நாட்கள் அவை
குமிழிகள் பார்க்கும் ஆசையில்
சோப்புக்கட்டிகளை ஊறவைக்க
அடிக்காமல் விளையாடிய தாயும்
சொர்க்கம்
வீட்டு முற்றத்தில் தேங்கிய மழைநீரில்
இறங்கி விளையாட ஆசைபட்டு அழுத
குட்டிப்பாப்பாவிற்காக
காகிதக்கப்பல் மிதக்கவிட்ட
தந்தையும்,தனையனும்
அன்பு வெள்ளத்தில் நனையவைத்ததை
யாரறிவார்
வளர்ந்திட்ட நானும்
வாடித்தான் போகிறேன்
மீண்டும் அந்த நாட்கள்
வந்திடாதாவென ?
என் இந்நினைவுகள்
வருங்காலத்தில்
என் கணவர்,குழந்தைகளுடன் விளையாடுகையில்
என் கடந்தகாலத்தை
காலம் கடந்தும் முன்னிறுத்தும்
கடந்தகால நினைவுகள்
நிகழ்கால ஏக்கங்கள்
வருங்கால எதிர்பார்ப்புடன்
......
முற்றிற்று
ஆசைகளல்ல இக்கவிதை ....