நீ பார்த்த பிறகு தான்
நான் அடிக்கடி
கண்ணாடி முன் நின்றேன்
நீ உச்சரித்த பிறகு தான்
என் பெயரே எனக்கு
பிடித்துப் போனது
நீ சிரித்த பிறகு தான்
என்னுள் சிறகுகள்
முளைத்திடக் கண்டேன்
நீ இயல்பானது தொட்ட பிறகு தான்
என்னுள் அனல் மின்நிலையம்
இருப்பதை அறிந்து கொண்டேன்
நீ பிரிந்த பிறகு தான்
செத்துக் கொண்டே
வாழவும் கற்றுக் கொண்டேன்