இனம் புரியா என் காதலை
இணைத்திட நீ வருவாயா
இனம் புரியா உணர்வு உன் மேல்
அதை உணர்த்தவும் வழி சொல்வாயா
கண்ணீர் வழிகிறது உனக்காக
ஆனால் அதன் வலி எனக்குள்ளே
உன் கரம் பிடித்திட கனவுகள் கண்டேன்
உன்னை மறக்க நேரிடும் என அறியாமல்...
காதலும் வாழ்க்கையும் உன்னோடு வேண்டும்
நீயில்லாமல் இது இரண்டும் ஏது ...
உன் விழியில் என் முகம் பார்த்தேன்
ஆனால் அது கானல் நீர் என அறியாமல்.
காதலை சொல்லத் துடித்தவனிடம்
காதலை நிருபிக்க சொன்னால் என்ன செய்வேன்.
காதல் கடிதம் பல நூறு வண்ணமாய் வடித்தேன்
வடித்த கடிதத்தை படித்துரைக்க வந்தேன் .
விதியின் மகன் உன் காதலனாவதை கண்டேன்
வடித்த கவிதையும் வார்த்தைகளும் வறண்டு போனதுவே.
உன்னை எண்ணி என் இதயம் உருகுவதை
என் கண்களால் வடியும் கண்ணீரில் கண்டேன்
பின்பு உணர்ந்தேன் காதல் செய்தது என் தவறல்ல
அதை உனக்கு உணர்த்தாமல் சென்றதே என் தவறென்று.
காதல் செய்யும் நண்பர்களே நீங்கள் காதல் செய்தால்
அதை அந்த பெண்ணிடம் முதலில் தெரியபடுத்துங்கள்
இல்லா விட்டால் என் கானல் நீர் போல் உங்கள் காதல் ஆகிவிடும்..
அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்