இந்தியத் தாய் நாடே
அடிமை விலங்கினை உடைத்திட
அந்நியனை விரட்டிட
எத்தனை போராட்டங்கள்
எத்தனை உயிர் பலிகள்
சுதந்திரம் கிடைத்தது
நாட்டுக்கு மட்டுமே
பெண் விடுதலை வெறும் ஏட்டில் தான்
இந்திய தாய் நாட்டில் இல்லை
இந்த பாரத மாதா
துயில் உரியப்படுகிறாள் தினமும்
இந்தியாவை தாய் நாடு என்பர்
கடலை கடல் அன்னை என்பர்
நிலத்தை பூமா தேவி என்பர்
அஃறிணையான பொருட்களுக்கெல்லாம்
அன்னையவள் பெயரை சூட்டிடும்
நம் மனிதகுலம்
உயர்திணையான மதிப்புமிக்க பெண்குலத்தை
அஃறிணையை விட கேவலமாக
நடத்துவதும் ஏனோ
பெண் என்பவள் இன்பம் கொடுத்திடும்
ஒரு கருவி
பிள்ளை பெற்றிடும்
ஒரு இயந்திரம்
காலை முதல் மாலை வரை பணிகள் செய்திடும்
ஒரு பணிப்பெண்
மொத்தத்தில் பெண் என்பவள் ஒரு அடிமை
இது தானே உலகம் பெண்களுக்கு கொடுத்திடும்
சான்றிதழ்
ரயிலில் கற்பழிப்பு
ஓடும் பேருந்தில் மானபங்கம்
காதலை மறுத்த பெண்
குத்திக் கொலை
தினமும் வரும் செய்திகள் இவைதானே
வக்கிரமம் பிடித்த ஆணினம்
கையில் பெண்கள்
குரங்கு கையில் கிடைத்த பூமாலை
கடவுளுக்கு சாத்த வேண்டிய பூமாலையை
காலில் போட்டு மிதித்திடும் குலம்
இன்றய மனித குலம்
இந்த நிலை மாறும் வரை
இந்திய வரைபடம் மட்டுமல்ல
உலகத்தின் வரைபடமே
அவலட்சணமாகத் தான் தோன்றும்