நண்பர்களுக்கு அன்பு வணக்கம்,
நான் தான் உங்க சிக்கு. நானும் மதுரைக்காரி தான்னு சொல்ல ஆசைப்பட்டாலும் இப்ப சென்னையில இருக்கேன். ஒரு பெண்கள் கலைக்கல்லூரியில ஆங்கில விரிவுரையாளரா இருக்கேன். எங்க குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம், அதே சமயம் ரொம்ப strictம் கூட. அம்மா, அப்பா, ரெண்டு அண்ணா, அண்ணி and தம்பின்னு எப்பவும் சுத்தி ஆளுங்க இருக்க வீடு நம்ம வீடு. Strictஆ இருந்தாலும் பாசக்காரய்ங்க. அதனால எனக்கு வெளிய நண்பர்கள் அதிகம் கிடையாது. கல்லூரியும் கல்லூரி முடிஞ்சா வீடும் தான் என்னோட வட்டம்.
அந்த வட்டத்தை விரிவுப்படுத்திக்கிற ஒரு தளமா தான் நான் FTCஅ நினைக்கிறேன். வெளிய யார்க்கிட்டயாவும் நான் ஒரு அரட்டை செயலில பேசிட்டு இருக்கேன்னு சொன்னா என்னைய ஒரு மாதிரி தான் பார்ப்பாங்க. ஆனா வெளிய இருக்க மனுஷங்களை விட இந்த மெய்நிகர் மனிதர்களை தான் என் மனசுக்கு நெருக்கமா உணர்றேன். முக்கியமா FTCல. காரணம் நான் வந்து நாலு நாள் தான் ஆகுது. இந்த நாலு நாள்ல என்னோட குறைவான நபர்கள் பேசியிருந்தாலும் அவங்க எல்லாருமே ஒரே ஒருத்தரோட வெவ்வேறு பிம்பமா தான் தெரியறாங்க. அவ்வளவு அன்பும், யதார்த்தமும், சிலரிடம் வெளிப்படைத்தன்மையும் கூட இருக்கு.
இங்க இருக்க எல்லா நண்பர்களும் ஒவ்வொரு விதத்துல திறமையானவர்களா இருக்கீங்க. அது இந்த forumல இருக்கிற ஒவ்வொரு பதிவுலையும் தெரியுது. இதையெல்லாம் படிக்கும்போதே சந்தோசமா இருக்கு. என்னோட பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும்னு எனக்குத் தெரியல. இருந்தாலும் இந்த நாலு நாள்ல கூட என்னைய எதாவது எழுத சொல்லி ஊக்கப்படுத்தின நண்பர்களுக்கு ரொம்ப நன்றி. நான் கண்டிப்பா முயற்சி செய்யறேன்.
உலகத்தை தனி ஒருவனா பார்க்கிறதை விட, ஒரு நண்பனோட, தோழியோட சேர்ந்து பார்க்கிறது உலகத்தின் மீதான வேற ஒரு பார்வைய கொடுக்கும் என்ற எளிமையான நம்பிக்கையோட வாழற ஒரு எளிய மனுஷி நான். ஒரு சகப்பயணியாக உங்களோட இந்த உலகை பார்க்க எனக்கு ரொம்பவும் ஆர்வமா இருக்கு. இணைந்து பயணிப்போம்.
பேரன்புடன்,
Chiku