தேவையானபொருள்கள்:
1.இட்லி – 6
2.தக்காளி – 3
3.சின்ன வெங்காயம் – 1/2கப் பொடிதாக நறுக்கியது
4.பூண்டு – 1/4 கப் பொடிதாக நறுக்கியது
5.கொத்தமல்லி இலை – சிறிதளவு
6.கறிவேப்பிலை – சிறிதளவு
7.சோம்பு – சிறிதளவு
8.பெருங்காயத் தூள் – சிறிதளவு
9.கிராம்பு, பட்டை – சிறிதளவு
10.பச்சை மிளகாய – 3 பொடிதாக நறுக்கியது
11.உப்பு – தேவையான அளவு
12.தயிர் – சிறிதளவு
13.நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் இட்லியை உதிரிஉதிரியாக பிட்டு வைத்துக்கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கிராம்பு, பட்டை போட்டு பொன்நிறமாக வறுக்கவும்.
அதனுடன் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
பின்பு வெங்காயம் மற்றும் பூண்டையும் சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
நன்கு வதக்கியவுடன் தக்காளியையும் கொத்தமல்லி இலையையும் உப்பும் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும்.
கிளறிய பின்பு தயிரையும் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
பின்பு அதனுடன் உதிர்த்த இட்லியை சேர்த்து நன்கு கிளறி மேலாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்.
சுவையான தக்காளி இட்லி உப்புமா தயார்.