பெண்ணே நீதான் உலகத்தின் ஆதாரம்
அவளே உலகத்தின் சுவாசம்
அவள் இல்லையேல்
இந்த அகிலம் இல்லை...
பெண் யாதுமாகி நின்றாள்
யாவரும் புகழும் வண்ணம்
நீ பெருமை சேர்க்கும் பணியை செய்தாய்...
பெண்ணே எத்தனை அவதாரம்
அன்னையாக,சகோதரியாக,
மனைவியாக , தோழியாக
அனைத்திலும் நீ தான் சிறந்தவள்.....
பெண்ணே உலகத்தில் எத்தனை
பதவிகள் நீ பெற்றாய்
அதிபராகவும், பிரதமராகவும்,போர் விமானியாவும்,
விண்வெளி வீராங்கனை, ஒலிம்பிக் பதக்கம் வென்று தாய் நாட்டின் மானத்தை காப்பாற்றவும் சாகசம் புரிந்தாள்....
பெண் என்பவள் அவளே
உலகத்தின் கற்பக விருட்சம்
அவள் போன்று பாசமாகவும்,பரிவாகவும்
கருனையாகவும், பணிவாகவும் நடந்து
கொள்வதில் அவள் போல் யாருமில்லை.....
பெண்ணே கவனம் இது
ஆணாதிக்க சமூகம் இங்கு சாதனை
படைத்தவர்கள் அனைவரும் இதை
எதிர் கொண்டு தான் சாதனை
புரிந்துள்ளனர் ......
பெண் என்பவள் உலகத்தின் எழுச்சி
அவளே நாட்டின் பெருமை
அவளே குடும்பத்தின் ஆதாரம்
அவளே சாதனைகளின் பிறப்பிடம்.....
பெண்ணே நீ சமூகத்தின்
பல்வேறு வகையான விமர்சனங்களை
எதிர் கொண்டு வீரு நடை கொண்டு
வா சாதனை படைப்போம்....
தாயின் அன்பிற்கு ஈடேது
தாயின் அன்பும் கொஞ்சும்
மழலை யின் சிரிப்பும் விலையேது
வாருங்கள் தாய் அன்பை போற்றுவோம்
இனி வளமான எதிர் காலம் அமைப்போம்......