Author Topic: ~ அடைந்ததை அழித்தல்-பஞ்சதந்திரக் கதைகள்:- ~  (Read 740 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218406
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அடைந்ததை அழித்தல்-பஞ்சதந்திரக் கதைகள்:-




ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்து கொண்டேயிருக்கும். அந்தமரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்து வந்தது.

ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று அந்த நாவல்மரத்தின் அருகில் வந்தது. ரக்தமுகன் அதைப்பார்த்து, ‘‘நீஎன்விருந்தாளி. அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத்தருகிறேன். சாப்பிடு!’’ என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது.

பழங்களை முதலைசாப்பிட்டது. வெகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்த பின் தன் வீட்டுக்குத்திரும்பிச் சென்றது. இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல் மரத்தின் நிழலையடைந்து நல்ல விஷயங்களைப் பற்றிப்பேசி இன்புற்றுக்காலம் கடத்திவந்தன . தான் சாப்பிட்டது போக மிஞ்சிய நாவற்பழங்களை முதலை வீட்டுக்குக் கொண்டு போய் தன்மனைவிக்குக் கொடுத்துவந்தது.

ஒருநாள் முதலையின் மனைவி, ‘‘அமிருதம் போலிருக்கும் இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது? ’’என்று முதலையைக் கேட்டது.

அன்பே, ரக்தமுகன் என்றொரு குரங்கு இருக்கிறது. அது என் நெருங்கிய நண்பன். அதுதான் இந்தப் பழங்களை எனக்கு அன்போடு தருகிறது’’ என்றது முதலை.

அதற்கு முதலையின் மனைவி, ‘‘அமிர்தம் போல் இருக்கும் இந்தப் பழங்களை எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுடைய நெஞ்சும் கட்டாயம் அமிர்தம் போலத்தான் இருக்கும். நீ என்னை மதிக்கிறாய் என்றால் எனக்கு அந்தக் குரங்கின் நெஞ்சைக் கொண்டு வந்துகொடு. அதை நான் சாப்பிட்டு நோயும் முதுமையும் இல்லாமல் என்றும் உன்னோடு விளையாடிக் கொண்டிருப்பேன்’’ என்றது.

‘‘அன்பே, முதலாவதாக அது நமக்குச்சகோதரன் மாதிரி. இரண்டாவதாக, அது நமக்குப் பழங்களைத் தருகிறது. எனவே அதை நான் கொல்ல முடியாது. இந்த வீணான ஆசையை விட்டுவிடு. ’’என்றது.

அதற்கு முதலையின் மனைவியோ, ‘‘அந்த குரங்கை எனக்காக கொடுக்கவில்லை என்றால் நான் இறந்துவிடுவேன் ’’என்று சொல்லி கோவமாக சென்றது

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அதன் கண்களில் நீர்நிறைந்தது. ‘‘இனி நான் என்ன செய்வேன்?அந்தக் குரங்கை எப்படிக் கொல்வது? ’’என்று சிந்தித்த படியே குரங்கிடம் போயிற்று.

வெகுநேரம் கழித்து முதலை கவலையோடு வருவதைக் குரங்கு பார்த்தது.

‘‘நண்பனே, ஏன் இவ்வளவு நேரம்? ஏன் சந்தோஷத்தோடு பேசமாட்டேன் என்கிறாய்? நல்ல நீதிகளையும் சொல்லமாட்டேன் என்கிறாய்? ’’என்று குரங்கு கேட்டது.

‘‘நண்பனே, என் மனைவி‘ ஏ நன்றி கெட்டவனே, என் முகத்தில் விழிக்காதே. தினந்தோறும் நீ நண்பனிடம் பழங்களைப் பெற்றுச் சாப்பிடுகிறாய். ஆனால் அதற்குப்பதில் உபசாரம் செய்யும் முறையில் அதை உன்வீட்டுவாசலுக்கும் நீ அழைத்துவரவில்லையே! இந்த செயலுக்கு உனக்கு மன்னிபே கிடைக்காது என்றது

ஆகவே, ‘‘நீகரால முகனை நம்வீட்டுக்கு அழைத்துவா. அப்போதுதான் நீபதில் உபசாரம் செய்ததாகும். இல்லாவிட்டால் நீ என்னை இனிமேல் உயிரோடு பார்க்கமுடியாது. மறு உலகத்தில் தான் பார்க்க முடியும் ’என்று சொன்னாள். அவள் சொற்களைக் கேட்டுவிட்டு உன்னிடம் வந்திருக்கிறேன்

‘‘உன் விஷயமாய் அவளோடு சண்டை போட்டதிலே இவ்வளவு நேரமாகிவிட்டது. நீ என் வீட்டுக்குவா! என் மனைவி ஆவலோடு உன்னை எதிர்பார்த்து, வரவேற்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருக்கிறாள். ’’என்றது முதலை.

‘‘நண்பனே, அண்ணி சொன்னது சரிதான். எவ்விதமெனில், தருவது, பெறுவது; மனம் விட்டுப் பேசுவது, கேட்பது; விருந்து உண்பது, படைப்பது; இவை ஆறும் நட்புக்கு அடையாளங்கள் அல்லவா? ஆனால், நான் காட்டிலும் இருப்பவனாயிற்றே! உங்களுடைய வீடு நீருக்கடியில் அல்லவா இருக்கிறது!அங்கேநான்எப்படிவரமுடியும்?’’என்றதுகுரங்கு.

‘‘நண்பனே, கடலுக்கடியில் ஒரு அழகிய மணல்திட்டில் என்வீடு இருக்கிறது. எனவே என் முதுகில் ஏறிக் கொண்டு பயமில்லாமல் இன்பமாய்வா!’’ என்றது முதலை.

குரங்குக்கு ஆனந்தம் பிறந்தது. ‘‘நண்பனே, அப்படியானால் சீக்கிரமாகக்கிளம்பலாமே, ஏன் தாமதிக்கவேண்டும்?இதோ நான் உன் முதுகின் மேல் ஏறிக் கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, குரங்கு முதலையின் முதுகின் மேல் ஏறிக்கொண்டது.

ஆனால், ஆழமான கடலில் முதலை போவதைப் பார்த்துக் குரங்கு பயந்துநடுங்கிப்போயிற்று. ‘‘அண்ணா மெதுவாகப்போ! அலைகள் அடித்து என் உடம்பெல்லாம் நனைந்துவிட்டது’’ என்றது.

அதைக் கேட்டதும் முதலைக்கு ஒரு யோசனையுண்டாயிற்று. இந்தக்குரங்கு என் முதுகிலிருந்து நழுவினால் ஒரு அங்குலம் கூட அப்பால் செல்ல முடியாது, அத்தனை ஆழமான கடல் இது. என் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டது. ஆகவே இதனிடம் என் நிஜநினைப்பை சொல்லிவிடுகிறேன். தன் இஷ்ட தெய்வத்தை அது நினைத்துப்பிரார்த்தித்துக் கொள்ளட்டும் என்று எண்ணியது.

குரங்கைப்பார்த்து, ‘‘நண்பனே, என் மனைவி சொல்லியபடி உன்னை நம்பவைத்து, உன்னைக் கொல்வதற்காக வீட்டுக்குஅ ழைத்துப்போகிறேன். இனி உன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக்கொள்’’ என்றது முதலை.

‘‘அண்ணா, உனக்கோ அண்ணிக்கோ நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை ஏன் கொல்லப்பார்க்கிறீர்கள்?’’ என்று குரங்கு கேட்டது.

‘‘கேள், நீ கொடுத்த பழங்கள் அவளுக்கு அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே உன் நெஞ்தைத்தின்ன வேண்டும் என்று அவள் ஆவலாயிருக்கிறாள் .அதனால்தான் இப்படி ச்செய்தேன்’’ என்றது முதலை. உடனே சமயோசிதபுத்தியுள்ள குரங்கு, ‘அடடாஅப்படியாசங்கதி?

அதை நீ ஏன் அங்கேயே என்னிடம் சொல்லவில்லை?

நண்பனே, ருசிமிகுந்த நாவற்பழங்களை நாவல் மரத்தின் பொந்தில் மறைத்து வைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருந்தால் அண்ணிக்காக அதை எடுத்துக் கொண்டு வந்திருப்பேனே! அந்த ருசிமிகுந்த நாவற்பழங்களை சாப்பிட்டால் நீண்டகாலம் இளமையுடன் உயிர்வாழலாம்!’’ என்ற துகுரங்கு.

அதைக் கேட்டதும் முதலைக்கு ஆனந்தம் ஏற்பட்டது.‘‘ நண்பனே, அப்படியானால் அந்தநாவற்பழங்களை எனக்குக்கொடு, என்துஷ்டமனைவி அதைச்சாப்பிட்டுதன் உபசாவத்தை முடிப்பாள். உன்னை நாவல் மரத்துக்கே திரும்ப அழைத்துச் செல்கிறேன்’’ என்று சொல்லிற்று.

சொன்ன படியே முதலை நாவல் மரத்தடியை நோக்கித் திரும்பிச் சென்றது. வழி நெடுககுரங்கு ஒவ்வொரு தெய்வத்தையும் நூற்றுக்கணக்கான முறைவேண்டிக் கொண்டே போயிற்று.

எப்படியோ ஒரு விதமாககரைக்குவந்ததும், உயர உயரத்தாவிக்குதித்துச் சென்று அந்த நாவல் மரத்தின் மேல் ஏறிக்கொண்டது. ஏறிக்கொண்டே, ‘‘நல்ல காலம்! நான் பிழைத்துக் கொண்டேன். நம்பிக்கை வைக்கத்தகாதவனிடம் நம்பிக்கைவைக்காதே! நம்பிக்கையானவனையும் நம்பாதே!நம்பிக்கைவைப்பதால் விபத்து ஏற்பட்டுவேரோடு அழித்துவிடுகிறது. என்று சொல்வதில் நியாயமிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு நிஜமாக நான் மறு பிறப்பெடுத்திருக்கிறேன்’’ என்று குரங்கு எண்ணியது.

குரங்கிடம் முதலை, ‘‘நண்பனே, நாவற்பழங்களை கொடுஎனக்கு’’ என்றது.

குரங்கு சிரித்துவிட்டு நிர்ப்பயமாகப் பதில் சொல்லிற்று.‘‘ சீ, மூடா! நம்பிக்கைத்துரோகி!

உன்னுடைய உண்மையான குணம் எனக்கு தெரிந்துவிட்டது. உன் வீட்டைப்பார்த்துக் கொண்டு போய்விடு. இனிமேல் இந்த நாவல் மரத்தடிக்கு வராதே!” என்றது குரங்கு.

‘‘முட்டாள் தனமாக இதனிடம் என் எண்ணத்தை ஏன் வெளியிட்டேன்? எப்படியாவது இதனுடைய நம்பிக்கையைப் பெறவழியுண்டா?நம்பவைக்கப் பேசிப்பார்க்கிறேன்’’ என்று எண்ணியது.

‘‘நண்பனே, விளையாட்டுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். உன் மனதையறிய விரும்பினேன். அவ்வளவுதான். என்வீட்டுக்கு விருந்தாளியாகவா!அண்ணி உன்னைப் பார்க்க ஆவலோடிருக்கிறாள்’’ என்று முதலை சொல்லிற்று.

‘‘துஷ்டா, உடனே நீ போய்விடு. நான் வரமாட்டேன்’’ என்றது குரங்கு. அதைக் கேட்டு முதலை மிகுந்த வெட்கமடைந்தது. அந்த இடத்தை விட்டுச் சென்றது.

நீதி: ஒருவன் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால், கண்டிப்பாக ஒருநாள் எல்லாவற்றையும் இழந்துஏமாறுவான்!