என் அவளை தேடும் பயணம்
என்னவளே ! படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்திற்கும் சுவாசம் எப்படி இன்றியமையாததோ,
அது போல் என்னில் உன் நினைவுகள் இன்றியமையாதவை..
இளங்காற்றும் பொறாமை கொள்ளும், என் அவளின் மெல்லிய சிணுங்கல் கண்டு.
தாகம் தீர்க்கும் தண்ணீரும், தாகம் கொள்ளும், என் அவளின் தேகம் கண்டு...
செங்கதிரும் நகைத்து நிற்கும், என் அவளின் நாணம் கண்டு...
என்னவளே ! நேசம் எனும் மையினால், காதல் எனும் உன் ஓவியம் வரைந்தேன், என் இதயம் எனும் காகிதத்தில்..
இதயத்தில் வரையப்பட்டதாலோ, ஏனோ? நீ தொலைவில் இருந்த பொழுதும் என்னுள்ளம் தொடர்ந்து உன் நினைவுகளுடனே பயணிக்கின்றது...
வாழ்வில் எண்ணற்ற பயணங்கள் துவங்கி முடிந்த பொழுதிலும்,
என் தேவதையின் கைகோர்க்கும் அக்காதல் எனும் பயணத்திலே தொடர்ந்து பயணிக்க விரும்புகிறது என் உள்ளம்...
என் அவளை நோக்கிய பயணம் அது வெகு தொலைவு ஆன பொழுதிலும், பயணத்தின் முடிவுதனில் தேவதை அவள் தரிசனத்தை எண்ணியே மனம் ஆறுதல் கொள்ளும்..
உலகில் ரசிக்க ஆயிரம் அற்புதங்கங்கள் இருந்தபோதிலும்,
அனைத்தையும் மறந்து நான் ரசிப்பது, என் தேவதையின் கைகோர்க்கும் அந்த அற்புத நாளை என்னிய பயணத்தையே..
தொலைவுகள் தொடர்ந்த போதிலும், தொடர்ந்து பயணிக்கும் என் நெஞ்சம் என் தேவதையின் நினைவுகளுடன்...... (AHAMED AARONN )....
(குறிப்பு : பதிவிற்கு மன்னிக்கவும் 😁)