நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து
முழுப்பொருள் :
நெஞ்சே உனக்கு தெரியும் என் தலைவன் என்னைவிட்டு பிரிந்து சென்று இருக்கிறான். இப்பிரிவால் நான் படும் பாடு சொல்லி மாலாது. இதனால் நான் கொண்டுள்ள கவலையான ஆசை நோயானது எத்தன்மைவாய்ந்தது எவ்வளவு கொடியது என்று நீ அறிவாய். (பிறருக்கு புரியாது இது எவ்வளவு கொடியது என்று). ஒருவிதத்தில் பார்த்தால் நான் (காதலால்) கொண்ட துன்பத்திற்கு நீயும் தான் காரணம்.
என்னால் முடிந்தவரையில் இந்த நோயினை தீர்க்கும் மருந்து பற்றி கேட்டுப்பார்த்தேன். எனக்கு ஒன்றும் கிட்டவில்லை. நெஞ்சே நன்றாக யோசித்துப்பார், என் தலைவன் உன்மூலமாக தான் எனக்கு இக்காதலை தந்தான். யோசித்துப்பார், நீ அறிந்தவரை இதற்கு இந்த நோயை தீர்க்கும் மருந்து இருந்தால் என்னிடம் கண்டிப்பாய் சொல்!
இங்கே நாம் காணவேண்டிய ஒன்று, தலைவி இந்த நோய்க்கு புறவயமான மருந்துகள் ஆன கஷாயம், இலை, தழை என்று நினைத்து இருந்தால் அதனை மருத்துவர்களிடம் கேட்டு இருப்பாள். ஆனால் அவளுக்கு தெரியும் இந்த நோய் மிகவும் அகவயமான ஒன்று என்று. அதனால் தான் அகவயமாக உரையாடி நெஞ்சத்திடம் கேட்கிறாள் மருந்தினை.
அவளுக்கு தெரியும் நெஞ்சிற்கு தெரியும் தலைவன் தான் இதற்கு மருந்து என்று. அதனால் தான் நெஞ்சத்திடம் அவனை கேட்காமல் கேட்கிறாள்.
அடுத்து:
பிணிக்கு ---- ------- அணியிழை
----------------- தானே மருந்து.