Author Topic: யாருக்கு எய்ட்ஸ் வரும்?  (Read 3744 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்:
சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் காமம், காதல் எல்லாவற்றையும் தூண்டுவது கண்கள். கண் பார்வைக்குரிய கிரகம் என்று சொன்னால் சூரியன், சந்திரன், சுக்ரன். இது மூன்றுமே காதலுக்கும் உரிய கிரகம். இதில் சுக்ரன்தான் இனப்பெருக்க உறுப்புகளுக்கு உரியது.

ஆனால், வீரியத்தைக் கொடுப்பது செவ்வாய். மேலும் உடலுறவில் நீடிக்கக் கூடிய நேரங்களுக்கும் செவ்வாய்தான். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் என்று பார்த்தீர்களென்றால் அவர்கள் காமத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அதற்காகத்தான் அதற்கு சமமானவர்களைச் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறோம். அப்பொழுதுதான் நன்றாக இருக்கும். பிரச்சனை இருக்காது.

சுக்ரனுடன் செவ்வாய் சேர்ந்து இருக்க, அதனுடன் சனியோ ராகுவோ சேர்ந்துவிட்டால் பாலியல் சம்பந்தமான நோய்கள் ஆரம்பித்துவிடும். சுக்ரனும் செவ்வாய் இருந்தாலே காம இன்பங்களில் மனம் நாட்டம் பெறும். இந்த சுக்ரன் செவ்வாய் காம்பினேஷனோடு சனி சேர்ந்தாலோ அல்லது சனி பார்த்தாலோ அல்லது சுக்ரன் செவ்வாயுடன் ராகு சேர்ந்தாலோ காமக்களியாட்டங்கள் அதிகரிக்கும். அதாவது முறையற்ற புனர்ச்சிகள் போன்றவைகள் அதிகரிக்கும்.

அப்பொழுது தசாபுத்தியைப் பார்த்துவிட்டு சுக்ரன் செவ்வாய் காம்பினேஷனுடன் செவ்வாய் திசை வருகிறதென்றால் அவர்கள் உஷாராக இருக்க வேண்டும். அந்த மாதிரி நேரங்களில்தான் சிலதெல்லாம் தேடிவரும். அப்பொழுதுதான் இவர்களின் கண்களுக்குப் படும். இவ்வளவு நாளாக இந்த ஊரில் இருக்கிறோம். இந்த ஊரில் இப்படி ஒரு தொழில் நடப்பது தெரியவேயில்லையே. அவர்கள் கூட அந்தத் தொழில் செய்கிறார்களா? இப்படியெல்லாம் அந்த வைப்ரேஷனுக்கு உரிய ரேகைகள் வரும்போது காட்டும். அப்பொழுது கொஞ்சம் சபலப்படாமல்...

நீங்கள் சொல்லக்கூடியது பால்வினை நோய் சம்பந்தப்பட்டது வரும். எய்ட்ஸ் போன்றவற்றிற்கு?

எய்ட்ஸுக்குத்தான் இதை நான் பிரதானமாகச் சொல்லவந்தேன். இந்த வி.டி. இதுபோன்ற விஷயங்களையெல்லாம் தாண்டிப் போகக்கூடிய விஷயம் இது. சுக்ரன் செவ்வாயுடன் சனியோ, ராகுவோ இருந்தால் - இவைகளுக்கெல்லாம் குறிப்பிட்ட பாதைகள் இருக்கிறது. ஒன்றுக்கொன்று நெருக்கமான பாதைகள் இருந்துவிட்டதென்றால் - மிகக் கடினம், அவ்வளவுதான். அ‌ந்த மாதிரியான அமைப்புகளெல்லாம் இருக்கிறது.

ஆகையால் முக்கியமானதென்று பார்த்தால், ஹெச்.ஐ.வி.யை உருவாக்குவது என்பது சுக்ரன், செவ்வாய், ராகு காம்பினேஷன்தான். இதேபோல சுக்ரன், செவ்வாய், சனி சேர்ந்தாலும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. பகை நட்சத்திரங்கள், பகைக் கோள்க‌ளி‌ன் பார்வை, சேர்க்கை இதெல்லாம் பாலியல் நோய்கள், குறிப்பாக ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் எல்லாவற்றையும் கொடுக்கும். மிகவும் எச்சரிக்கையாகவும், ஒழுக்கமாகவும் இருந்து அந்த நேரத்தில் சபலப்படாமல் இருக்க வேண்டும். ஏனென்றால், நிறைய பேருக்கு சுக்ரன் செவ்வாய் ராகு இருந்து அதை சனி பார்த்து கூடவே ஏழரைச் சனியும் வந்துவிட்டால் கன்ஃபார்மா எய்ட்ஸ்தான்.

அப்படியானால், ஜாதகத்தை வைத்தே எய்ட்ஸைக் கண்டுபிடித்துவிடலாம்?

கிட்டத்தட்ட 140 எய்ட்ஸ் ஜாதகம் நம்மிடம் இருக்கிறது. எய்ட்ஸ் எரிமலை என்று ஒரு டாக்டர் முகாம் நடத்தினார்கள். அப்பொழுது ஒரு ஆய்வில் நாம் இறங்கினோம். சிலருடைய பிறந்த தேதிகளையெல்லாம் சேகரித்தோம். இதேபோல, அண்ணா சாலையில் உள்ள ஒரு இரத்த பரிசோதனை நிலையத்தில், அதாவது வெளிநாடுகளுக்கு தேர்வாகிறார்களே, குறிப்பாக அரபு நாடுகளுக்கு தேர்வாகிறவர்களுக்கு இவர்கள் சான்றிதழ் கொடுத்தால்தான் செல்ல முடியும். அந்த இடத்திற்குப் போய் அங்குள்ள சிலவற்றையெல்லாம் சேகரித்து அதன் அடிப்படையில் சொன்னதுதான் இதெல்லாம்.

சுக்ரன், செவ்வாய், ராகு சேர, அவர்களை சனி பார்க்க கூடவே ஏழரைச் சனியும் சேர்ந்துவிட்டால், அவ்வளவுதான்.

மீள்வார்களா? மாட்டார்களா?

அது, ஆயுள்காரகன், ஆயுள் ஸ்தானாதிபதி அவர்கள் என்ன கதியில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மீள்வதா? சாவதா என்பது தெரிந்துவிடும்.