உன் வெட்கம் என்னையும் வெட்கப்பட வைக்கிறதடி...!!
உன் விரல் அசைவில் விழுந்தது என் அணுக்கள்..,,
பார்வையால் கடத்தப்பட்டது என் தினப்பொழுதுகள்...,,
வாக்கியம் தீட்டி உன்னை வரைய நினைத்தேன்..
உன்னை கண்ட பின்பு அத்தனையும் மறந்தேன்..
சுழன்று வந்த பூமிக்குள் சுழறாத நான்,, நீயாகி போனேன்..
காத்திருப்புக்கும் காதல் வந்தது ஏனோ..?
உன்னை எண்ணி ,
தலையணைக்கும் காய்ச்சல் தானோ..!
என் உதிரத்தில் பிணைவதை நிறுத்திவிட்டு..
உள்ளத்தால் இணைந்து...
என் உடலோடு கலந்து விடு...!!
பெரு மூச்சுக்குள் போர்க்கருவிகள் எதற்கடி..??
கருவிழிகள் கூட கூரிய ஆயுதம் ஆனதடி..!!
வழிந்த வியர்வையில் சரிந்தது என் தாகம்..
உதிர்ந்த பூக்களில் முறிந்தது என் மோகம்...
பல வருட வேட்க்கையும் அடங்கியதடி ..!!
உன் சிலநோடி ஸ்பரிசத்தில்....
நின்றது இதயம் மட்டுமல்ல...
என் இமைக்கா விழிகளும் தான்...
இதயத்தில் இதழ்களையும் ,,
இதழ்களில் இறுக்கத்தையும் ,,
பதித்துவிட்டு..
கலைத்துவிட்டாய் என் கனவை....!!