கனல் :3
மாலினி ஒரு சிறு நெருடலுடன் பைலை வாங்கி கொண்டு கதவு புறம் திரும்ப ," ஸ்வர்ண மாலினி .. ஒரு வழியா என்கிட்ட வந்திட்டயா ? " என்றக்குரல் அவள் காதுக்குள் ஒலித்தது . திடுக்கிட்டு திரும்பி விக்ரமை பார்க்க அவனோ எதோ பைலை பார்த்துக்கொண்டு இருந்தான் .
அவள்.." சார் கூப்பிட்டங்களா?" என்று கேட்க, அவன் தோள்களை குலுக்கி "இல்லையே மிஸ் .மாலினி " என்று தலை ஆட்டினான் . அவன் குரல் போலத்தானே இருந்தது என்று குழம்பியவாறு வெளியே வந்தாள் மாலினி .
அந்த கட்டட காம்பௌண்ட் அருகே நின்று இருந்த தன் deo வண்டியை ஸ்டார்ட் செய்து செலுத்தினாள். ஒரு சிக்னல் வந்ததும் வண்டியை ஆப் செய்துவிட்டு வேடிக்கை பார்க்க , ஒரு பிச்சைக்காரன் அவள் அருகே வந்து டப்பாவை குலுக்கி காசு கேட்டான் .அவள் அவன் நகர்ந்தாள் போதும் என்று ஹேண்ட் பேக்கில் இருந்து 5 ரூபாய் நாணயம் எடுத்து அவன் பாத்திரத்தில் போட்டாள் . பிச்சைக்காரனோ போகாமல் ," தாயீ ! அதே வள்ளல் குணமிருக்கு இன்னும் அப்படியே ...மகராசி ..நல்ல இரு ! என்று வாழ்த்தி விட்டு போனான் .
"அதே வள்ளல் அ ...அவனை இப்போதுதானே பார்க்கிறாள் ..! என்ன சொல்கிறான் இவன் " என்று நினைத்தவாறு சிஃனலில் இருந்து வண்டியை எடுத்து சிட்டாய் பறந்து வீடு வந்து சேர்ந்தாள்.
அந்த அவெனியூ முழுக்க மரங்கள் நிரம்பி குளுமையை பரப்பி இருக்க , அந்த சிறு ரோ ஹவுஸ் தெருவில் நுழைந்து ஒரு கீழ் வீட்டின் கேட் ஐ நிறைந்து வண்டியை பார்க் செய்து விட்டு முதல் மாடியில் இருக்கும் அவள் வீட்டுக்குள், அம்மா அம்மா என்று அழைத்துக்கொண்டு சென்றாள். அம்மா அவளை எதிர் கொண்டு , " என்னமா வேலை கிடைச்சுதா?" என்று சிறு கவலையுடன் கேட்டாள்.நடுத்தர வயதிலும் அழகும் மங்களகரமும் சேர நின்ற அகிலா வை கட்டி கொண்டு , " இந்த இளவரசிக்கு வேலை தராதவர்களும் உண்டோ ? மஹாராணி ? " என்று கம்பீரமாய் இடுப்பில் கை வைத்து கேட்க , " அகிலா தலையில் தட்டியவாறு ," அட என் மகளே ..இளவரசிக்கு எதுக்குடி வேலை? " என்றாள்.
தலையை தடவியவாறு , " ஆமாம் லே " என்று சிரித்தாள்." வேலை கிடைச்ருருசுமா ...ஆனா ...ஒரு குழப்பம் " என்று கன்னத்தில் கை வைத்து யோசனை போல அபிநய்யித்தாள்.
" ஏன் அந்த கம்பெனில சலரி கொடுப்பங்களா னு தான அக்கா ? " என்று கேட்டவாறு அறையில் இருந்து வெளியே வந்தாள் தாரிணி . மாலினி அவள் காதை திருகி , " ஹே வாலு காலேஜ் போகலையா ? " என்று கேட்க தாரிணி முறைத்தாள் ." உன்ன எல்லாம் எவன் வேலைக்கு சேர்த்திட்டனோ ? அம்மா அந்த கம்பெனி உறுபடும்னு நெனைக்கிரே ? " என்று அகிலாவிடம் திரும்பி பாவம் போல கேட்டாள் .மாலினி மேலும் அவளை அடிக்க கை ஒங்க , " ஹலோ மேடம் ...கொரனல எங்களுக்கு லீவு ..பட் உங்களுக்கு கிடையாது ..இதுகூட நியாபகம் இல்லா..? நீ எல்லாம் ஒரு ..." என்று இழுத்தாள்.
மாலினி சட் என்று முகம்மாறி ஆமா என்று முணுமுணுத்து பேசாமல் அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள். அகிலாவும் தாரிணியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் ..இன்னேரம் கலவரம் படுத்தி இருப்பாள் ..என்ன அமைதியாக உள்ளே போய் விட்டாள் என்று.
ஹேண்ட் பாக் ஐ டேபிளில் வைத்து விட்டு யோசனையில் மூழ்கி விட்டாள் . அந்த குரல் கேட்டதே அது நிஜம் தானா? அல்லது பிரம்மையா? சிஃனலில் அந்த பிச்சைக்காரன் ஏதோ பல வருடம் பார்த்து பழகி விட்டவன் போல சொன்னானே ..? ஏன் ?என்று நெற்றியை தேய்த்து விட்டு கொண்டாள் மாலினி . அப்போது "ஸ்வர்ணமாலினி ..." என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது .சுற்றும் முற்றும் பார்த்தாள் பயத்துடன் யார் அழைத்து என்று.
அவள் காது அருகே ரகசியம் போல " ஏன் பயப்படுகிறாய்..ஸ்வர்ணா?" என்று மீண்டும் ஒலிக்க," அம்மாஆஆ " என்று சத்தம் போட்டாள் பதட்டத்துடன் அந்த ஸ்வர்ணமாலினி .
(கனல் எரியும் )