Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
ஆன்மீகம் - Spiritual
»
முற்பிறவி என்றால் மூன்றாவது பிறவியா?
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: முற்பிறவி என்றால் மூன்றாவது பிறவியா? (Read 1326 times)
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 500
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
முற்பிறவி என்றால் மூன்றாவது பிறவியா?
«
on:
November 25, 2011, 05:11:31 AM »
முற்பிறவி என்றால் மூன்றாவது பிறவியா?
முற்பிறவி என்றால் முந்தைய பிறவி என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அது மூன்றாவது பிறவியையும் குறிக்கும். (என்னோட அகராதியில
)
ஜோதிடத்தில் முக்கியமான மூன்று வீடுகள் உள்ளன. அவை ஒன்று ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகள். இவற்றை திரிகோணம் என்பர். இவற்றை லட்சுமி வீடுகள் என்றும் சொல்வர் சிலர். என்னைப்பொருத்த வரை இந்த மூன்று வீடுகளும் ஒருவனுக்கு நன்றாக அமைந்தாலே அவனது வாழ்வும் சிறப்பாக அமையும்.
இந்த மூன்று வீட்டின் அதிபதிகள் தான் ஒருவனுக்கு நன்மைகளை வாரி வழங்குபவர்கள். இவர்களை யோகாதிபதி என்பர். அதாவது ஒரு லக்னத்து யார் சுபர் என்றால் அவர்கள் இந்த மூன்று வீட்டின் அதிபதிகளாகத்தன் இருப்பார்.
ஜோதிடத்தில் லக்னம் எனபது இப்பிறவியை காட்டுகின்றது. ஐந்தாம் இடம் இதற்க்கு முன்பு எடுத்த பிறவியை காட்டுகின்றது. அப்ப அந்த ஒன்பதாம் இடம்? அது ஒருவனின் மூன்றாவது பிறவியை காட்டுகின்றது. அதாவது சென்ற பிறவிக்கு முந்தைய பிறவி. சொல்ல முடியாது அது ஒருவனின் அனைத்து பிறவிகளையும் கூட சொல்லலாம்.
முற் பிறவியில் செய்த புண்ணியம் தான் இப்பிறவியில் நமக்கு ஏற்ப்படும் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்று கூறுவர். ஐந்து ஒன்பதாம் வீடுகள் கெட்டிருந்தால் நீங்கள் முற்பிறவிகளில் பாவம் செய்துள்ளீர்கள் என்று பொருள்.
இதற்க்கு முந்தைய ஜென்மத்தில் ஒருவன் செய்த பாவம் புண்ணியத்தை பொறுத்தே அவனுக்கு குழந்தை பிறக்கும் என்று ஜோதிடம் சொல்கிறது. ஆதலால் தான் குழந்தை பாக்கியத்திற்கு ஐந்தாம் இடத்தை சொல்கின்றனர்.
சென்ற பிறவிக்கு முன்பிறவியில் செய்த பாவம் புண்ணியமும் ஒருவனுக்கு குழந்தை உண்டா இல்லையா என்பதை தீர்மானிக்கின்றது என நினைக்கின்றேன். ஆதலால் தான் ஒன்பதாம் இடத்தை பாக்கிய ஸ்தானம் என்று சொனார்கள். அதாவது ஒருவனுக்கு கிடைக்கப் போகும் சகல சௌபாக்கியங்களும் இந்த வீட்டை பொறுத்தே அமையும்.
தந்தை, குரு, அதிஷ்டம் , பரம்பரை சொத்து இவற்றை ஒன்பதாம் வீடு குறிக்கின்றது.
அது மட்டும் அல்ல ஐந்தாம் வீடு கெட்டிருந்தாலும் அவர்களுக்கு ஒன்பதாம் வீடு நன்றாக இருந்தால் அவர்களுக்கும் குழந்தை பிறக்கும். (அந்த வீட்டு அதிபதிகளின் நிலை ரொம்ப முக்கியம்.)
ஆதலால் தான் நம் பெரியோர்கள் முற்பிறவியில் செய்த பலனால் குழந்தை செல்வம் என்று கூறியுள்ளனர். இந்த முற்பிறவியை ஐந்தாம் வீடு மற்றும் அதற்கு முந்தைய பிறவியை ஒன்பதாம் வீடு குறிக்கின்றன.
ஆதலால் முற்பிறவி எனபது மூன்றாவது பிறவியையும் தானே குறிக்கின்றது?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது முந்தைய அனைத்து பிறவியையும் குறிக்கும் வார்த்தை தான்.
ஒருவனுக்கு மிகுந்த நன்மையை செய்யக்கூடிய திசை எது என்றால் அது ஒன்பதாம் அதிபதியின் திசை தான்.
குழந்தை இல்லாதவர்கள் இதை படித்து விட்டு நொந்து கொள்ள வேண்டாம். குழந்தை இல்லாததும் ஒருவிதத்தில் நன்மையே....... உங்கள் ஆன்மீக (தவ) பயணத்திற்கு.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவம் உங்களுக்கு கை கொடுக்கும் முயற்சி செய்யுங்கள். அல்லது ஒரு குழந்தையை தத்தெடுத்து வளருங்கள்.
முடிந்த வரை இப்பிறவியில் நன்மை செய்யுங்கள்....நன்மை இப்பிறவியிலும் கிடைக்கலாம்....அடுத்த பிறவியிலும் கிடைக்கலாம்.... ஏன் பிறவியே இல்லாமலும் போகலாம்.
வாழ்க வளமுடன்....நலமுடன்....
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
ஆன்மீகம் - Spiritual
»
முற்பிறவி என்றால் மூன்றாவது பிறவியா?