நமது சித்தர்கள் அருளிய அரும் பெரும் பொக்கிசமான பாடல்களில் எமக்கு கிடைத்த சில நூல்களை குறிப்பாக ஆன்மீகம் சம்பந்தமானவற்றை ஆன்மீகம்.கொம் வாசகர்களுடன் பகிர்;ந்து கொள்வதில் பெருமையடைகிறோம்.
முதற்படியாக தமிழிற்கு அகத்தியம் என்ற இலக்கண நூல் தந்த பதினென் சித்தரில் முதனமையானவரும், தமிற் கடவுளாம் முருகப்பெருமானின் சீடருமான குருமுனியாம் அகத்திய சித்தர் அருளிய பாடல்களை இங்கு தருகிறோம். எமக்கு கிடைத்த நூல்களின் அடிப்படையில் இந்தப்பகுதி மேலும் விரிவடையும்.
அகத்திய சித்தர் அருளிய தீட்சைப்பாடல் 5
அகத்திய மகாமுனிவர் ஞானகக்கிசம் -- 5
அகத்திய மகாமுனிவர் ஞானம் -- 6
அகத்திய மகாமுனிவர் ஞானம் -- 8
அகத்தியர் சோதிமணி சூத்திரம் -- 8
அகத்தியர் திருமந்திரம் -- 8
அகத்தியர் சிவகுளிகை – 8
அகத்திய மகாமுனிவர் ஞானம் 30
சித்தர் பெருமக்கள் தங்கள் அனுபவங்களை சொல்லும் போது நல்லவர் கைகளிற்கு அவை முறைப்படி சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் முக்கிய விடயங்களை பரிபாசையாகவே சொல்லி வைத்துள்ளனர். சரியான அர்த்தம் புரியாமல் சித்தர் பெருமக்கள் பாடல்களை அனுபவத்திற்கு கொண்டுவர முயற்சிப்பது பல நேரங்களில் தீய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். சித்தர் பாடல்களை அனுபவத்திற்கு கொண்டு வரவிரும்பும் அன்பர்கள் தகுந்த குருவின் உதவியுடன், அவர்கள் வழிகாட்டுதலின் மூலம் கொண்டு வரும்படி தங்களை அறிவுறுத்துகிறோம்.