சிவமே! ஏன் இந்த வெறித்த பார்வை..
ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலை நோக்கியே..
சிவமே! நீ ஆண்டவனின் புண்ணிய
படைப்பின், மானுட பிறவி ஆவாய்..
சிவமே! நீ அன்பில்லா முரடன் அல்ல.. உன்
பாசத்தை பகிர அறியாதவன் ஆவாய்..
சிவமே! நீயே வானுக்கும் மண்ணுக்கும்..
பொறுப்பான, காவல் காரன் ஆவாய்
சிவமே! நீ அழ தெரியாதவன் அல்ல, உன்
கண்ணீரை மறைக்க தெரிந்தவன் ஆவாய்..
சிவமே! நீ விரும்பும் உயிர்களுக்கு உனையே,
முழுதாய், அர்ப்பணிக்கும் கொடையாளி ஆவாய்.
சிவமே! நீ பொருள் தேடி அலைபவன் அல்ல.. உன்
பந்தங்களை பராமரிக்க உழைப்பவன் ஆவாய்..
சிவமே! ஏன் இந்த வெறித்த பார்வை..
ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலை நோக்கியே..
சிவமே! நீ சோம்பேறியானவன் அல்ல.. உன்
அங்கீகாரத்துக்காக காத்திருப்பவன் ஆவாய்..
சிவமே! நீ உணரும் இந்த தவிக்கும் தனிமையும்
உன் சிந்தை சீராகி, உறுதியானவன் ஆவாய்..
சிவமே! நீ உன் வாழ்க்கை பாதையாய்
பிறருக்காகவே, வழிவகுக்கும் மகான் ஆவாய்..
சிவமே! நீ என்று, இவ்வையக அணைத்து
சக்திகளை தாங்கும், சுமைதாங்கி ஆவாய்..
சிவமே! நீயே ஆண்டவனின் புண்ணிய
படைப்பின், மானுட பிறவி ஆவாய்..
நீயே, காத்திடுவாய் இப்பிரபஞ்சத்தையே..
அவளுள்! அவனுள்!! அடங்கிய சிவமே!!