சங்கு
சங்கு என்பது அண்ட சராசரத்தின் ஆணி வேர் ஒலியான "ஓம்"-மை குறிக்கும். அதனால் அண்ட சராரத்தில் உள்ள அனைத்து ஒலிகளை விட கடவுளின் ஒலியே உயர்ந்தது என்பதை சங்கு குறிக்கிறது
வில்லும் அம்புகளும்
கடவுளின் கையில் இருக்கும் வில்லும் அம்புகளும் ஆற்றலை குறிக்கும். தன் கையில் வில்லையும் அம்புகளையும் ஏந்தி நிற்பதால், அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து ஆற்றல் சக்திகளையும் கட்டுப்படுத்துபவர் அவர் என்பதை அது குறிக்கும்.
இடியேறு
கடவுளின் கையில் இருக்கும் இடியேறு அவரின் திடத்தை குறிக்கும். சவால்களை சந்திக்கும் போது இடியை மனதில் வைத்துக் கொண்டு சவால்களை சந்திக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு இது தூண்டுதலாக விளங்கும்.
பாதி மலர்ந்த தாமரை
துர்க்கை அம்மன் கையில் இருக்கும் பாதியாக பூத்த தாமரை, வெற்றி நிரந்தரமல்ல என்பதை குறிக்கும். மேலும் சேருக்கு மத்தியில் தாமரை பூப்பதை போல், உலகத்தில் உள்ள பல சுகங்களுக்கு மத்தியில் மனித மனது ஆன்மீகத்தை நாட வேண்டும் என்பதையும் குறிக்கும்.
வாள்
துர்க்கை அம்மன் கையில் இருக்கும் வாள் அறிவை குறிக்கிறது. அறிவே உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது என்பதை குறிக்கிறது வாளின் பளபளப்பும் கூர்மையும். மேலும் அது துரு பிடிப்பதும் இல்லை என்பதையும் குறிக்கிறது.
சுதர்சன் சக்ரா
உலகம் தன் கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்குகிறது என்பதை கடவுளின் ஆள் காட்டி விரலில் அழகாக சுழலும் சக்கரம் குறிக்கிறது. தீய சக்திகளை அளிக்க துர்க்கை அம்மன் இந்த ஆயுதத்தை பயன்படுத்துவார்.
திரிசூலம்
திரிசூலம் என்பது மூன்று அம்சங்களை குறிக்கும் - சத்வா, ராஜாஸ் மற்றும் தாமாஸ். அமைதியையும் மோட்சத்தையும் அடைய ஒருவர் இந்த மூன்று அம்சங்களையும் சரிசமமாக கொண்டிருக்க வேண்டும்.
அபய முத்திரை
கடவுளின் ஒரு கை எப்போதும் தன் பக்தர்களை ஆசீர்வதிக்கும் அபய முத்திரையை கொண்டிருக்கும். தன் பக்தர்களை பயத்திலிருந்து எப்போதும் காப்பதை இது குறிக்கும்.