எல்லா மதங்களும் தாயை பற்றி உயர்வாகவே சொல்லி இருக்கிறது. கிட்டத்தட்ட தெய்வத்திற்கு நிகராக நிறைய அம்சங்கள் தாயிடம் இருக்கின்றன. அன்பு ,கருணை ,பாசம், பாதுகாப்பு,அக்கறை என தன குழந்தைமீது மட்டும் காட்ட கூடிய விஷயங்கள் நிறையவே இருப்பதால், ஒவ்வொரு குழந்தையும் தன் தாயை கடவுளுக்கு நிகராக பார்க்கிறது.
ஆனால் கடவுள் எல்லா படைப்புகள் மீதும் அன்பு செலுத்துகிறார் , ஒரு தாய் தன் குழந்தை மீது மட்டுமே இத்தகைய அன்பை செலுத்துகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாம் வல்லவன் இறைவன். தன்னால் முடிந்ததை எல்லாம் குழந்தைக்கு செய்பவள் தாய்