FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on July 19, 2019, 07:59:34 PM

Title: பேரன்பின்_கணங்கள்
Post by: இளஞ்செழியன் on July 19, 2019, 07:59:34 PM


அவ்வொரு பிரிவிற்கு பின்
அடிக்கடி தொடர்புகொள்ள
முற்படும் உன்னை
அநாயசமாக மறுதலித்திருந்தேன்,
காயம் செய்யும்
கலைகளில் மகிழும்
சாத்தான்மனம்.

நாட்கள் கடந்து
இப்போது உன் முறை,
பேசமுடியாது என்று சொன்ன பிறகும்
எதற்கு தொந்தரவு செய்துகொண்டிருக்கிறாய் என்கிறாய்.
உண்மையென்ன தெரியுமா?
உன் அகங்காரங்களை ஆற்றுப் படுத்துகிறேன்,
என்னை நிராகரிக்கும் வாய்ப்புகள் வழங்குகிறேன்,
உன்னையும் சாத்தான் ஆக்குகிறேன்.

தீர்க்கப்படாத கணக்கு
தீர்ந்த அகமகிழ்வில்
இனி நீ
அமைதிகொள்வாய்.
என்
மனமே....
Title: Re: பேரன்பின்_கணங்கள்
Post by: Guest 2k on July 21, 2019, 06:06:38 PM
பேரன்பின் கணங்கள் வலிகள் நிரம்பியவை  :). அருமையான கவிதை நண்பா