Author Topic: அம்மாவின் பண்டிகை.......  (Read 425 times)

Offline Guest

அம்மாவின் பண்டிகை.......
« on: November 06, 2018, 01:08:58 PM »
அவள் இன்னும்
வந்தபாடில்லை வெளியே...
.
புத்தாடை இன்னும்தான்
காத்திருக்கிறது....
.
கணவனின் உறவுகள்
மகனின் மகளின்
மகன் வயிற்று பேரர்களின்
மகள் வயிற்றுப்பேரர்களின்
உறவுகள் நட்புகள் என
விருந்துகள்
இன்னும் முடிந்தபாடில்லை...
.
எப்போது நுளைந்தாலும்
ஏதாவது அடுப்பில்
வெந்துகொண்டேயிருக்கிறது....
.
வெங்காய வாடையும்
கண்ணீர் நனைத்த முந்தானையும்
என் இதயததை நனைத்துக்கொண்டே
இருக்கிறது....
.
சமைத்துக்கொண்டே இருக்கிறாள்
சமையற்கட்டும்
அழுதுகொண்டே இருக்கிறது....
புத்தாடை சமையற்கட்டுக்குள்
செல்லவியலாமல் காத்திருக்கிறது....
.
அவள் இன்னும்
வெளியே வந்தபாடில்லை
அம்மா....
நம் குதூகலங்களுக்காய்
வெந்துருகுகிறாள்....
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ