இரும்பு மனிதன் என எண்ணி இருந்தேனே
அமிலம் என நீ வந்தாய் உன்னில் கரைந்தேனே
கனியில் விதையென நான் முடங்கி கிடந்தேனே
மண்ணாய் நீ கிடைக்க மரமாய் வளர்ந்தேனே..
திறந்த ஜன்னலில் புகுந்த காற்றாய்
மேகம் உரசிட தோன்றிடும் கீற்றாய்
என்னுள் நுழைந்து எனதாய் இருந்த
பெண்ணை உன்னை எப்படி மறப்பேன்