என்னென்ன தேவை?
கற்றாழை - இரண்டு,
பட்டை - சிறிய துண்டு,
ஐஸ்கட்டிகள் - தேவைக்கேற்ப,
மோர் - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து, அதனுடன் மோர், உப்பு, ஐஸ் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். சுவையான கற்றாழை மோர் மிக்ஸ் ரெடி.
* கற்றாழைக்கு ‘குமரி’ என்ற பெயர் உண்டு. தொடர்ந்து அருந்தி வந்தால், பெயருக்கு ஏற்ப என்றும் குமரியாக, இளமைத் தோற்றத்துடன் முகம் பொலிவோடு இருக்கும்.