ஒரு நூலில் தவிர்க்க வேண்டிய குற்றங்கள் பத்து என நன்னூல் 12 ஆம் பா தெரிவிக்கிறது.
அவை :
1 - குன்றக் கூறல் - விரிவாகக் கூற வேண்டியதைக் குறைவாகக் கூறுதல் .
2 - மிகைபடக் கூறல் - துரும்பைத் தூண் எனல் .
3- கூறியது கூறல் - முன் சொன்னதையே மீண்டும் சொல்லுதல் .
4 - மாறுகொளக் கூறல் - முன்னுக்குப் பின் முரணாகக் கூறுதல் .
5 - வழூஉச் சொற் புணர்த்தல் - பிழையாக எழுதுதல் .
6 --மயங்க வைத்தல் - இதுவா அதுவா என வாசகர் அய்யுறும்படி எழுதுதல் .
7 - வெற்றெனத் தொடுத்தல் - இலக்கிய நயமில்லாத , பொருத்தமற்ற , சாதாரணச் சொற்களைப் பயன்படுத்தல் .
8 - மற்றொன்று விரித்தல் - ஒரு பொருள் பற்றி எழுதுகையில் இடையே வேறு பொருளுக்குத் தாவி அதை விவரித்தல் .
9 - சென்று தேய்ந்து இறுதல் - விரிவாய்த் தொடங்கியது போகப் போகக் குறுகிக் கடைசியில் சப்பென முடிதல் .
10 - நின்று பயன் இன்மை - ஆழ்ந்த கருத்தின்றி . வாசகர்க்குப் பயனற்றதை எழுதுதல் .
நன்னூலார் காலத்தில் இல்லாமல் பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகளான கதை , கவிதை , கட்டுரை முதலிய சிறு
படைப்புகளுக்கும் இவ்விதி பொருந்தும் .
இக்காலத் தமிழ் நூல்களிலும் ஏடுகளிலும் குற்றங்கள் நிறையவே காணப்படுகின்றன ; இது மொழியைச் சீரழிக்கும் நிலை ;
ஆனால் இது பற்றிக் கவலைப்படாமல் தமிழை எப்படி வேண்டுமாயினும் எழுதலாம் எனக் கருதுகிற , " சுதந்தர " ,
மனப்பான்மை உடையோர்க்குப் பஞ்சமில்லை .