ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 220
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/0Latest/OU/220.jpg)
வானம் எல்லாம் நீலமாக..
நாணம் கொஞ்சம் தள்ளி போக..
தேன்போல் இனிமை நம்மை சேர..
இரு கரங்கள் கோர்த்தே இணைந்தே போவோம்!
கொட்டும் காதல் அருவியாக..
நமை முட்டும் ஊடல் தகர்ந்து போக..
நமதன்போ என்றும் மலைகளாக..
துயர் நீக்கி வாழ்வோம் அலைகள் போலே!
மேகம் நம்மில் மழையை தூவ-
ஆகும் நேரம் மோகம் போதும்!
அறிவியல் சொல்லும் அணுவின் அளவே
நம்மை சேரும் துன்பம் போதும்!
வெகு தூரம் நீளும் வானின் அளவாய்..
அன்பு மகிழ்ச்சி காதல் யாவும்..
மிகையாய் நம்மை சேர்வது போலே..
வாழ்வோம் நாமே!!! யுகம் பல கடந்தே!!!
இரு கை கோர்த்து.
இயற்கை சேர்த்து..
உவகை கொள்ள...
வேண்டும் நீயே!!!
__நகைச்சுவையாளன்__பீன்__
[/size][/color]